பதிவு செய்த நாள்
01 செப்2020
11:26
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிக சரிவை சந்தித்த நிலையில் இன்று(செப்.,1) நல்ல உயுர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை உயர்ந்தது.
கொரோனா ஊரடங்கில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 23.9 சதவீதம் சரிந்தது. இதன்காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 890 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்று சரிவிலிருந்து மீண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 399.53 புள்ளிகள் உயர்ந்து 39,027.82ஆகவும், நிப்டி 116.70 புள்ளிகள் உயர்ந்து 11,504.20ஆகவும் வர்த்தகமாகின.
இன்றைய வர்த்தகத்தில் என்டிபிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், எஸ்பிஐ., ஏசியன் பெயின்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோடேக், எச்.டி.எப்.சி., உள்ளிட்ட நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த போதிலும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடர்கின்றன. காலை 11.10 மணியளவில் சென்செக்ஸ் 230 புள்ளிகளும், நிப்டி 30 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 காசுகள் உயர்ந்து ரூ.72.93ஆக வர்த்தகமானது.
கச்சா எண்ணெய் விலையை பொருத்தமட்டில் சர்வதேச சந்தையில் ஒரு பேரலின் விலை 1.04 சதவீதம் உயர்ந்து 45.75 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|