சென்செக்ஸ், நிப்டியுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களுக்கு அனுமதி? சென்செக்ஸ், நிப்டியுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்களுக்கு அனுமதி? ...  சேவைகள் துறை வளர்ச்சி ஆகஸ்டில் ஓரளவு முன்னேற்றம் சேவைகள் துறை வளர்ச்சி ஆகஸ்டில் ஓரளவு முன்னேற்றம் ...
உலகளாவிய புதுமை குறியீட்டில் முதல் 50 நாடுகளில் இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2020
21:55

புதுடில்லி:‘உலகளாவிய புதுமை குறியீட்டில்’ முதல், 50 நாடுகள் வரிசையில், இந்தியா முதன்முறையாக இடம்பிடித்துள்ளது. இதற்கு முன் இருந்த இடத்திலிருந்து, நான்கு இடங்கள் முன்னேறி, 48வது இடத்தைப் பிடித்துள்ளது.


மேலும், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.உலக அறிவுசார் சொத்து அமைப்பு, கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் இன்சீடு பிசினஸ் ஸ்கூல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ‘உலகளாவிய புதுமை குறியீடு – 2020’ பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் மொத்தம், 131 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில், சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் போன்ற ஆசிய நாடுகள், கண்டுபிடிப்பு தரவரிசையில் கணிசமாக முன்னேறியுள்ளது தெரியவந்துள்ளது.புதுமை தரவரிசையில் சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும், முதல், 10 இடங்களை, அதிக வருவாய் கொண்ட நாடுகளே கைப்பற்றி உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. உலகில், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி, அரசின் ஆன்லைன் சேவைகள், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தீவிரமாக இருக்கும் உலகளாவிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கான குறிகாட்டிகளில், இந்தியா முதல், 15 இடங்களில் உள்ளதாக, உலக அறிவுசார் சொத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)