பதிவு செய்த நாள்
03 செப்2020
21:55
புதுடில்லி:‘உலகளாவிய புதுமை குறியீட்டில்’ முதல், 50 நாடுகள் வரிசையில், இந்தியா முதன்முறையாக இடம்பிடித்துள்ளது. இதற்கு முன் இருந்த இடத்திலிருந்து, நான்கு இடங்கள் முன்னேறி, 48வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.உலக அறிவுசார் சொத்து அமைப்பு, கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் இன்சீடு பிசினஸ் ஸ்கூல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ‘உலகளாவிய புதுமை குறியீடு – 2020’ பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மொத்தம், 131 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில், சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்னாம் போன்ற ஆசிய நாடுகள், கண்டுபிடிப்பு தரவரிசையில் கணிசமாக முன்னேறியுள்ளது தெரியவந்துள்ளது.புதுமை தரவரிசையில் சுவிட்சர்லாந்து, சுவீடன், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும், முதல், 10 இடங்களை, அதிக வருவாய் கொண்ட நாடுகளே கைப்பற்றி உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது. உலகில், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி, அரசின் ஆன்லைன் சேவைகள், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தீவிரமாக இருக்கும் உலகளாவிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கான குறிகாட்டிகளில், இந்தியா முதல், 15 இடங்களில் உள்ளதாக, உலக அறிவுசார் சொத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|