பதிவு செய்த நாள்
10 செப்2020
21:36
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில், 13.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், 45 ஆயிரத்து, 288 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுஉள்ளன.
ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், இறக்கு மதியானது குறைந்துள்ளது. மதிப்பீட்டு வாரத்தில் இறக்குமதி, 21.37 சதவீதம் அளவுக்கு குறைந்துஉள்ளது. மொத்தம், 50 ஆயிரத்து, 690 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.இறக்குமதி குறைந்திருக்கும் நிலையில், வர்த்தகப் பற்றாக்குறையும் குறைந்துள்ளது.
கடந்த, 1ம் தேதி முதல், 7ம் தேதி வரையிலான காலத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 5,402 கோடி ரூபாயாக உள்ளது.அதிகம்மதிப்பீட்டு காலத்தில், பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி, 42 ஆயிரத்து, 180 கோடி ரூபாயாக உள்ளது. இதே காலத்தில் இறக்குமதி, 40 ஆயிரத்து, 996 கோடி ரூபாயாக உள்ளது.பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதியில், பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி, 18 சதவீதம் அதிகரித்து உள்ளது.
ரசாயனங்கள் ஏற்றுமதி, 37 சதவீதமும்; மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 34 சதவீதமும் அதிகரித்து உள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை, பருப்பு வகைகள் இறக்குமதி, 101 சதவீதமும்; தாவர எண்ணெய் இறக்குமதி, 39 சதவீதமும்; மின்னணு பொருட்கள் இறக்குமதி, 6 சதவீதமும் அதிகரித்து உள்ளது.மதிப்பீடுமதிப்பீட்டு வாரத்தில், சீனாவுக்கான ஏற்றுமதி, 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, 20 சதவீதமும்; மலேஷியாவுக்கானது, 2.6 சதவீதமும்; அதிகரித்துஉள்ளது.குறைவுஇறக்குமதியை பொறுத்தவரை, கானா குடியரசிலிருந்து செய்யப்படும் இறக்குமதி, 1,521 சதவீதமும்; அங்கோலாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி, 171 சதவீதமும்; சீனாவிலிருந்து இறக்குமதி, 2.7 சதவீதமும் அதிகரித்துஉள்ளது.
ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்து உள்ளது. அதேபோல் நைஜீரியா, அமெரிக்கா, ஈராக்கிலிருந்து செய்யப்படும் இறக்குமதியும் குறைந்துஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|