அமேசானுக்கு பங்குகளை விற்க ரிலையன்ஸ் முயற்சி அமேசானுக்கு பங்குகளை விற்க ரிலையன்ஸ் முயற்சி ...  இரட்டை இலக்க வளர்ச்சியில் பயணியர் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியில் பயணியர் வாகன விற்பனை ...
நாட்டின் பொருட்கள் ஏற்றுமதி 13.35 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2020
21:36

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில், 13.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், 45 ஆயிரத்து, 288 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுஉள்ளன.

ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், இறக்கு மதியானது குறைந்துள்ளது. மதிப்பீட்டு வாரத்தில் இறக்குமதி, 21.37 சதவீதம் அளவுக்கு குறைந்துஉள்ளது. மொத்தம், 50 ஆயிரத்து, 690 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன.இறக்குமதி குறைந்திருக்கும் நிலையில், வர்த்தகப் பற்றாக்குறையும் குறைந்துள்ளது.

கடந்த, 1ம் தேதி முதல், 7ம் தேதி வரையிலான காலத்தில், வர்த்தகப் பற்றாக்குறை, 5,402 கோடி ரூபாயாக உள்ளது.அதிகம்மதிப்பீட்டு காலத்தில், பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி, 42 ஆயிரத்து, 180 கோடி ரூபாயாக உள்ளது. இதே காலத்தில் இறக்குமதி, 40 ஆயிரத்து, 996 கோடி ரூபாயாக உள்ளது.பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏற்றுமதியில், பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி, 18 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ரசாயனங்கள் ஏற்றுமதி, 37 சதவீதமும்; மருந்து பொருட்கள் ஏற்றுமதி, 34 சதவீதமும் அதிகரித்து உள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை, பருப்பு வகைகள் இறக்குமதி, 101 சதவீதமும்; தாவர எண்ணெய் இறக்குமதி, 39 சதவீதமும்; மின்னணு பொருட்கள் இறக்குமதி, 6 சதவீதமும் அதிகரித்து உள்ளது.மதிப்பீடுமதிப்பீட்டு வாரத்தில், சீனாவுக்கான ஏற்றுமதி, 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி, 20 சதவீதமும்; மலேஷியாவுக்கானது, 2.6 சதவீதமும்; அதிகரித்துஉள்ளது.குறைவுஇறக்குமதியை பொறுத்தவரை, கானா குடியரசிலிருந்து செய்யப்படும் இறக்குமதி, 1,521 சதவீதமும்; அங்கோலாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி, 171 சதவீதமும்; சீனாவிலிருந்து இறக்குமதி, 2.7 சதவீதமும் அதிகரித்துஉள்ளது.

ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்து உள்ளது. அதேபோல் நைஜீரியா, அமெரிக்கா, ஈராக்கிலிருந்து செய்யப்படும் இறக்குமதியும் குறைந்துஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)