பதிவு செய்த நாள்
11 செப்2020
22:55
புதுடில்லி:நடப்பு ஆண்டில் முதன் முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பயணியர் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி பெற்றிருப்பதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான,‘சியாம்’ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது, 14 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்து உள்ளது
எளிதான நிதியுதவி
வாகன தயாரிப்பாளர்கள், முகவர்களுக்கு விற்பனை செய்துள்ள வாகனங்களின் எண்ணிக்கை, ஆகஸ்ட் மாதத்தில், 2.16 லட்சமாக அதிகரித்து உள்ளது.இந்த விற்பனை தரவில், ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவன விற்பனை சேர்த்துக் கொள்ளப்படவில்லை. காரணம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த மார்ச் இறுதியில் இருந்து, தன் விற்பனை குறித்த தகவல்களை, கூட்டமைப்புடன் பகிர்வதில்லை என்பது தான்.
மதிப்பீட்டு மாதத்தில், கிராமப்புறங்களில் தேவை அதிகரித்தது, நகர்ப்புற சந்தைகள் சிறிது புத்துயிர் பெற்றது, பண்டிகை காலத்தை ஒட்டி வாங்கும் போக்கு, மற்றும் எளிதான நிதியுதவி திட்டங்கள் ஆகியவை விற்பனையை அதிகரிக்க உதவின.பன்முக பயன்பாட்டு வாகனமான, எஸ்.யு.வி., வாகனங்களின் விற்பனை, 15 சதவீதம் அதிகரித்து உள்ளது.இருசக்கர வாகனங்கள் விற்பனை, 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், பாதியளவு பட்ஜெட், மோட்டார் சைக்கிள் விற்பனையாகும்.
12 சதவீத சரிவு
ஸ்கூட்டர், நகர்ப்புற சந்தையில் அதிகம் விற்பனையாகும் வாகனமாகும். ஆனால், நகர்ப்புற சந்தைகள் இன்னும் எழுச்சி பெறாததால், ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் விற்பனை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர் விற்பனையில், 12 சதவீத சரிவு காணப்பட்டுள்ளது.ஆகஸ்ட் மாதத்துக்கான வர்த்தக வாகனங்கள் விற்பனை குறித்த தரவுகளை, ‘சியாம்’ இன்னும் வெளியிடவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|