தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஜூலையில் 10.4 சதவீதம் குறைவு தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி ஜூலையில் 10.4 சதவீதம் குறைவு ...  டிராக்டர்கள் விற்பனை  9 சதவீதம் அதிகரிக்கும் டிராக்டர்கள் விற்பனை 9 சதவீதம் அதிகரிக்கும் ...
சொந்த வாகனங்களை பயன்படுத்துவதால் பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2020
23:06

புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை, ஆகஸ்ட் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக, பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, மிகப்பெரிய சரிவு ஆகஸ்டில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், பெட்ரோலை பொறுத்தவரை, ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது. மக்கள் சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால், பெட்ரோல் விற்பனைஅதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

1.44 கோடி டன்

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பெட்ரோலிய பொருட்கள் விற்பனை, இதற்கு முந்தைய மாத விற்பனையை விட, 7.5 சதவீதம் சரிந்து, 1.44 கோடி டன்னாக உள்ளது. இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, 16 சதவீத சரிவாகும்.தொடர்ந்து ஆறாவது மாதமாக, கடந்த ஆகஸ்டிலும் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால், 48.6 சதவீதம் அளவுக்கு விற்பனையில் சரிவு ஏற்பட்டது.அடுத்த இரு மாதங்களில் ஓரளவு மீட்சி ஏற்பட்ட போதும், மீண்டும் ஜூலையிலிருந்து சரிவு காணத் துவங்கியது.

நாட்டில் மிக அதிக அளவு நுகரப்படும் எரிபொருளான டீசல் விற்பனையிலும், முந்தைய ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்டில், 12 சதவீத சரிவு ஏற்பட்டு உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது, 20.7 சதவீத சரிவாகும்.

மாற்றம் ஏதுமில்லை

பெட்ரோல் விற்பனையும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 7.4 சதவீதம் சரிந்துள்ளது. இருப்பினும், கடந்த ஜூலையுடன் ஒப்பிடும்போது, 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது.மக்கள் பொது போக்கு வரத்தை பயன்படுத்தாமல், சொந்த வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால், பெட்ரோலுக்கான தேவை அதிகரித்துள்ளது.சமையல் எரிவாயு விற்பனையில், கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது பெரிய மாற்றம் ஏதுமில்லை. மண்ணெண்ணெய் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 43 சதவீதம் சரிவாகும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில் துறை வட்டாரங்கள், கொரோனா பாதிப்புக்கு முந்தைய நிலையை அடைய, குறைந்தது, 3 – 4 மாதங்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளன.அக்டோபர்-, நவம்பர் மாதங்களில் பண்டிகை காலம் துவங்குவதால், அப்போது தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனாலும், கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டுவது, புதிய ஆண்டிற்கு முன்னதாக இருக்காது என்றும் தெரிவித்து உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)