பதிவு செய்த நாள்
13 செப்2020
00:06
மும்பை:டிராக்டர்கள் விற்பனை, நடப்பு நிதியாண்டில், 9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காண வாய்ப்பிருப்பதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா காரணமாக, துவக்கத்தில் பாதிப்புகள் இருந்தாலும், அதன்பின், டிராக்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக விற்பனை அதிகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, நடப்பு நிதியாண்டில், டிராக்டர்கள் விற்பனை, 7 முதல், 9 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இதற்கு முன், கொரோனா பாதிப்பு காரணமாக நிலவிய நிச்சயமற்ற நிலையால், நடப்பு நிதியாண்டில், டிராக்டர்கள் விற்பனை வளர்ச்சி, 2 முதல், 4 சதவீதம் வரையே இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
இப்போது நிலைமை மாறியுள்ளது.நல்ல பருவமழை, அரசின் கொள்முதல், நிலையான விலை, பணப்புழக்கம் ஆகியவை இருப்பதால், டிராக்டருக்கான தேவை அதிகரிக்கும். இருப்பினும், எதிர்பாராத வகையில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக, விவசாயம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|