பதிவு செய்த நாள்
17 செப்2020
21:20
புதுடில்லி,:சீனாவிலிருந்து வரும் துணிகர முதலீடுகள், நடப்பாண்டில், இதுவரை, 66 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது என, ‘வெஞ்சர் இன்டெலிஜென்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 19 ஆயிரத்து, 943 கோடி ரூபாய் முதலீடுகள் வந்திருந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை, 6,727 கோடி ரூபாய் முதலீடுகள் மட்டுமே வந்துள்ளன. மேலும், கடந்த ஆண்டில், 35 டீல்கள் நடைபெற்றிருந்த நிலையில் நடப்பு ஆண்டில், 30 டீல்களாக குறைந்துள்ளன.
நாட்டில் முதலீடு செய்யும் துணிகர நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் எண்ணிக்கையில், கடந்த ஆண்டு, சீனா, மூன்றாவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால், இந்த ஆண்டு, ஆறாவது இடத்துக்கு சென்றுவிட்டது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்னையில், இந்தியா, அன்னிய நேரடி முதலீட்டு விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. இதையடுத்து, சீனாவிலிருந்து குறிப்பாக, மெயின்லேண்டு சீனாவிலிருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் பெருமளவில் குறைந்துவிட்டன.இதனையடுத்து, அமெரிக்காவை அடுத்து அதிகம் எதிர்பார்க்கும் சீன முதலீடுகள் வராததால், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சற்று கவலை அடைந்துள்ளன.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|