பதிவு செய்த நாள்
21 செப்2020
22:24
புதுடில்லி:எச்.சி.எல்., டெக்னாலஜி, ஆஸ்திரேலியாவில் உள்ள, தகவல் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த, டி.டபுள்யு.எஸ்., நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது.இந்நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய சந்தைகளில் நிறுவனத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று, எச்.சி.எல்., தெரிவித்துள்ளது.
மேலும், டி.டபுள்யு.எஸ்., நிறுவனத்தின், 13.18 கோடி பங்குகளை, இந்திய மதிப்பில், 850.33 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.இந்த கையகப் படுத்துதல், ஆஸ்திரேலிய அன்னிய முதலீட்டு மறு ஆய்வு வாரியம், நியுசிலாந்தின் அன்னிய முதலீட்டு அலுவலகம் ஆகியவற்றின் ஒப்புதல்கள் கிடைத்த பிறகு முடிவுக்கு வரும்.
இந்த நடைமுறைகள் டிசம்பரில் முடியும் என தெரிகிறது.டி.டபுள்யு.எஸ்., நிறுவனம், 700 ஊழியர்களுடன், ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|