மின்னணு வர்த்தக கொள்கையை  விரைவில் அறிவிக்க கோரிக்கை மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அறிவிக்க கோரிக்கை ...  நாட்டின் பொருளாதார வளர்ச்சி ‘இக்ரா’வின் புதிய கணிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சி ‘இக்ரா’வின் புதிய கணிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
லட்சுமி விலாஸ் வங்கி புதிய இயக்குனர் குழு நியமிக்க ரிசர்வ்வங்கி ஒப்புதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2020
22:49

புதுடில்லி:லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்த ஏழு இயக்குனர்களை, பங்குதாரர்கள் நீக்கிய நிலையில், வங்கியின் அன்றாட விவகாரங்களை கவனிப்பதற்காக, மூன்று பேர் கொண்ட இயக்குனர்கள் குழுவை நியமிக்க, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 25ம் தேதியன்று, வங்கியின் பங்குதாரர்கள், அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட ஏழு இயக்குனர்களை நீக்கி அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக, 27ம் தேதியன்று ரிசர்வ் வங்கி, மூன்று சுயாதீன இயக்குனர்களை நியமித்தது. மீட்டா மாகான், சக்தி சின்ஹா, சதீஷ்குமார் கல்ரா ஆகிய மூன்று இயக்குனர்களை நியமித்து, இக்குழு, மீட்டா மாகான் தலைமையில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வங்கி, சிறிய நடுத்தர வணிகங்களுக்கு கடன் வழங்குவதிலிருந்து தங்கள் பார்வையை பெரிய வணிகங்களுக்கு திருப்பியதிலிருந்து, பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியதாயிற்று.



மருந்து நிறுவனமான ரான்பாக்ஸியின் நிறுவனர்களுக்கு, 720 கோடி ரூபாய் கடன் கொடுத்தது சிக்கல்களை உருவாக்கியது.ரெலிகேர் பின்வெஸ்ட் நிறுவனத்தின், 729 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலையான வைப்பு தொகையை முறைகேடாக பயன்படுத்தியதாக, வங்கியின் முன்னாள் ஊழியர்கள் இருவரை, டில்லி போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.மேலும், வாராக்கடன் பிரச்னைகளும் அதிகரித்திருந்த நிலையில், ஏழு இயக்குனர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)