பதிவு செய்த நாள்
30 செப்2020
22:22
மும்பை:கனடாவைச் சேர்ந்த, சொத்து மேலாண்மை நிறுவனமான, புரூக்பீல்டு, இந்தியாவில் அதன் ஆர்.இ.ஐ.டி., எனும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளையை, பங்குச் சந்தைகளில் பட்டியலிடும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இதையடுத்து, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளது என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை திரட்ட உதவுவதோடு, பொதுமக்களும் ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்ய, இத்தகைய ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் உதவுகின்றன.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது:புரூக்பீல்டு ஆர்.இ.ஐ.டி., புதிய பங்கு வெளியீட்டின் மூலம் 4,440 கோடி ரூபாயைத் திரட்ட திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மத்தியில் அல்லது, அடுத்த ஆண்டு ஜனவரி ஆரம்பத்தில், பங்கு வெளியீட்டு வரும் என எதிர்பார்க்கலாம். அப்படி வரும்பட்சத்தில், இது புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் மூன்றாவது ஆர்.இ.ஐ.டி., ஆகும்.
இதற்கு முன், எம்பஸி ஆபீஸ் பார்க்ஸ், மைண்டுஸ்பேஸ் ஆகியவை பங்கு வெளியீட்டுக்கு வந்தன.தற்போது, புரூக்பீல்டு ஆர்.இ.ஐ.டி., நிர்வகிக்கும் சொத்து, 1.4 கோடி சதுர அடியாகும். இதில், ஒரு கோடி சதுர அடி முடிக்கப்பட்டு விட்டது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|