பதிவு செய்த நாள்
05 அக்2020
21:46
ஐதராபாத்:கே.பி.சி.எல்., எனும், கிருஷ்ணபட்டணம் துறைமுக நிறுவனத்தை கையகப்படுத்துவதை முழுமையாக முடித்து விட்டதாக, ஏ.பி.எஸ்.இ.இசட்., எனும், அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் அறிவித்துள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனம், பங்குச் சந்தைகளுக்கு இது குறித்த தகவல்களை தெரிவித்துள்ளது. மேலும் இந்த கையகப்படுத்தலின் நிறுவன மதிப்பு, 12 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மூலமாக, சி.வி.ஆர்., குழுமம் மற்றும் இதர முதலீட்டாளர்கள் வசம் இருக்கும், கே.பி.சி.எல்., நிறுவனத்தின், 75 சதவீத பங்குகள், அதானி போர்ட்ஸ் வசம் வரும்.
இது குறித்து, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கரண் அதானி கூறியுள்ளதாவது:கே.பி.சி.எல்.,இப்போது அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஆகியிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.இந்த கையகப்படுத்துதல் உலகளவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|