பதிவு செய்த நாள்
22 அக்2020
22:47
மும்பை: இந்த வாரத்தில் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் அதிகரித்து வந்த நிலையில், நேற்று முதன் முறையாக, சரிவைக் கண்டன. உலக சந்தையின் எதிர்மறை போக்கினை தொடர்ந்து, முதலீட்டாளார்கள் வங்கி, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறை பங்குகளை வாங்குவதை குறைத்த காரணத்தால், சந்தைகள் சரிவைக் கண்டன.
நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 148.82 புள்ளிகள் சரிந்து, 40558.49 புள்ளிகளாக குறைந்தது. இது, 0.37 சதவீத சரிவாகும்.இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 41.20 புள்ளிகள் குறைந்து, 11896.45 புள்ளிகளாக சரிந்தது.நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டில்,
இண்டஸ்இண்ட் வங்கி, 3.10 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டது.
இதனையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, இன்போசிஸ், டைட்டன், எச்.டி.எப்.சி., வங்கி நெஸ்ட்லே இந்தியா, மாருதி, டெக் மகிந்திரா ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிந்தன.மாறாக, என்.டி.பி.சி., பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப் பங்குகள் விலை உயர்வை சந்தித்தன. உலக சந்தைகளின் பலவீனமான சூழல், இந்திய பங்குச் சந்தைகளிலும் நேற்று பிரதிபலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|