பதிவு செய்த நாள்
23 அக்2020
22:20
புதுடில்லி : ‘ஆதித்ய பிர்லா பேஷன் அண்டு ரீடெய்ல்’ நிறுவனம், அதன், 7.8 சதவீத பங்குகளை, பிளிப்கார்ட் குழுமத்துக்கு, 1,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளது.
நம்பிக்கை
ஒரு பங்கின் விலை, 205 ரூபாய் என, பங்குகளை, பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு விற்பனை
செய்கிறது, ஆதித்ய பிர்லா நிறுவனம்.பிளிப்கார்ட் குழுமத்துக்கு, 7.8 சதவீத பங்குகளை
விற்பனை செய்த பிறகு, ‘ஆதித்ய பிர்லா பேஷன் அண்டு ரீடெய்ல்’ நிறுவனத்தின் வசம் மொத்தம், 55.13 சதவீத பங்குகள்மட்டுமே இருக்கும்.
இது குறித்து, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியிருப்ப தாவது:அடுத்த, 5 ஆண்டுகளில், இந்தியாவில் ஆடைகள் தொழில், 7.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையதாக மாறும் என்ற நம் வலுவான நம்பிக்கையையே, வால்மார்ட் நிறுவனத்தை சேர்ந்த, பிளிப்கார்ட் செய்ய உள்ள முதலீடு பிரதிபலிக்கிறது.
வாய்ப்பு
இந்தியாவில், பேஷன் சில்லறை விற்பனை, நீண்ட கால வளர்ச்சிக்கான வாய்ப்பு களுடன் இருக்கிறது. இதற்கு, வளர்ந்து வரும் மத்திய தர வர்க்கம், செலவழிப்பதற்கான வருமான
அதிகரிப்பு, சாதகமான புள்ளி விபரங்கள், பிராண்டுகளின் மீதான ஈர்ப்பு ஆகியவை காரணமாக இருக்கின்றன.இவ்வாறு அவர்கூறியுள்ளார்.
இது குறித்து, பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி,
‘‘ஆதித்ய பிர்லாவால் நன்கு நிறுவப்பட்டிருக்கும் பேஷன் மற்றும் சில்லறை வணிக உள்கட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.இந்தியாவில் ஆடைத் துறையின் நம்பிக்கைக்குரிய வாய்ப்பை, நாங்கள் பயன்படுத்தி, பூர்த்தி செய்வோம் என்று தெரிவித்துஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|