பதிவு செய்த நாள்
27 அக்2020
06:15
மும்பை : எச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஆதித்யா புரி, தங்களுக்கு உத்வேகமாக இருந்தார் எனக் கூறி, அவருக்கு நன்றி தெரிவித்து, 'டுவிட்' செய்துள்ளது.
போட்டி வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., தனியார் துறை வங்கிகளில் முதலிடத்தில் இருக்கும், எச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாக இயக்குனரான ஆதித்யா புரி, தன்னுடைய, 25 ஆண்டு கால பணியிலிருந்து, நேற்று ஓய்வு பெற்றார்.இதையடுத்து, எச்.டி.எப்.சி.யின் போட்டியாளரான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அவர் தங்களுக்கு உத்வேகமாக இருந்தார் என, புகழாரம் சூட்டி நன்றி தெரிவித்து, விடை கொடுத்துள்ளது.
ஓய்வு பெறுவதை முன்னிட்டு, ஆதித்யா புரி, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியை முந்தியது எப்படி என்ற கேள்விக்கு பதிலளித்து இருந்தார்.அதில், 'ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் நீண்ட காலம் பணியாற்றிய கே.வி.காமத்தும் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர் தான்.'மேலும் தைரியமாகச் செயல்படுபவர். ஆனால், எச்.டி.எப்.சி., எச்சரிக்கையுடன் சாகசத்தில் ஈடுபட்டது, உதவிகரமாக இருந்தது' என்று பதிலளித்திருந்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|