விருந்தோம்பல் துறை பிரதமருக்கு கடிதம்விருந்தோம்பல் துறை பிரதமருக்கு கடிதம் ...  வைர ஏற்றுமதி அதிகரிக்க துறையினரின் கோரிக்கை வைர ஏற்றுமதி அதிகரிக்க துறையினரின் கோரிக்கை ...
ஒரு கிலோ தேயிலை 75 ஆயிரம் ரூபாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2020
21:48

குவஹாத்தி:கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், குவஹாத்தி தேயிலை ஏல மையமான, ஜி.டி.ஏ.சி., நேற்று சிறப்பு தேயிலையை, 1 கிலோவுக்கு, 75 ஆயிரம் ரூபாய் என, விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டில் இதுதான் அதிகபட்ச விலையாகும்.

இது குறித்து, குவஹாத்தி தேயிலை ஏலம் வாங்குவோர் சங்கத்தின் செயலர் தினேஷ் பிஹானி கூறியதாவது:உலகளவில், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு பெரிய சாதனையாகும். மனோஹரி கோல்டு ஸ்பெஷாலிட்டி தேயிலை, 1 கிலோ, 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

மனோஹரி தேயிலை எஸ்டேட், மிகுந்த கவனம் செலுத்தி, இந்த சிறப்பு தேயிலையை செப்டம்பரில் தயாரித்து, இந்த ஏல மையத்துக்கு அனுப்பியது. கடந்த ஆண்டு, இதே மனோஹரி தேயிலை தயாரிப்பு, 1 கிலோ, 50 ஆயிரம் ரூபாய் என ஏலம் போனது. தன்னுடைய சாதனையை இந்த ஆண்டு அதுவே முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில், அசாம் தேயிலையான, கோல்டன் பட்டர்பிளை தேயிலை, 75 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)