பதிவு செய்த நாள்
02 நவ2020
11:38
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் துவங்கி உள்ளது. இன்றைய வர்த்தகம் துவங்கிய அரைமணிநேரத்தில் சென்செக்ஸ் 473 புள்ளிகள் சரிந்த நிலையில் பின்னர் மெல்ல முன்னேறியது.
காலை 9.40 மணியளவில் சென்செக்ஸ் 139, நிப்டி 42 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 50.32 புள்ளிகள் சரிந்து 39,563.75ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 28 புள்ளிகள் சரிந்து 11,612.60ஆகவும் வர்த்தகமாகின.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற, இறக்கமான சூழல், அமெரிக்க அதிபர் தேர்தல் மீதான எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவதன் எதிரொலி உள்ளிட்ட காரணங்களாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல், டிசிஎஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிந்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் சரிந்து ரூ.74.43ஆக வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 3.27 சதவீதம் சரிந்து, 36.70 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|