டிரம்பா, பிடனா? இந்தியாவுக்கு யார் சாதகம்? டிரம்பா, பிடனா? இந்தியாவுக்கு யார் சாதகம்? ...  ‘இறக்குமதி வரியை உயர்த்துவது திறமையின்மைக்கு வழிவகுக்கும்’ ‘இறக்குமதி வரியை உயர்த்துவது திறமையின்மைக்கு வழிவகுக்கும்’ ...
அக்டோபரில் நாட்டின் ஏற்றுமதி 5.4 சதவீதம் சரிவு கண்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2020
22:12

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.4 சதவீதம் குறைந்துள்ளதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.

அமைச்சக அறிக்கையில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.4 சதவீதம் அளவுக்கு குறைந்து, 24.82 பில்லியன் டாலராக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில், 1.84 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இது குறித்து, அமைச்சகம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:

அக்டோபரில் ஏற்றுமதி குறைந்ததற்கு, பெட்ரோலிய பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தோல் ஆகிய துறைகளில் ஏற்றுமதி சரிந்தது, காரணமாக அமைந்து விட்டது.நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 19.05 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இக்கால கட்டத்தில், ஏற்றுமதி மதிப்பு, 150.07 பில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் இது,11.11 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

இறக்குமதியை பொறுத்தவரை, அதுவும் அக்டோபர் மாதத்தில், 11.56 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இந்திய மதிப்பில், 2.49 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதனையடுத்து, கடந்த அக்டோபரில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 8.78 பில்லியன் டாலராக, அதாவது, 64 ஆயிரத்து, 972 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)