பதிவு செய்த நாள்
03 நவ2020
22:12
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.4 சதவீதம் குறைந்துள்ளதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
அமைச்சக அறிக்கையில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.4 சதவீதம் அளவுக்கு குறைந்து, 24.82 பில்லியன் டாலராக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில், 1.84 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இது குறித்து, அமைச்சகம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது:
அக்டோபரில் ஏற்றுமதி குறைந்ததற்கு, பெட்ரோலிய பொருட்கள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தோல் ஆகிய துறைகளில் ஏற்றுமதி சரிந்தது, காரணமாக அமைந்து விட்டது.நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 19.05 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இக்கால கட்டத்தில், ஏற்றுமதி மதிப்பு, 150.07 பில்லியன் டாலர் ஆகும். இந்திய மதிப்பில் இது,11.11 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இறக்குமதியை பொறுத்தவரை, அதுவும் அக்டோபர் மாதத்தில், 11.56 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இந்திய மதிப்பில், 2.49 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதனையடுத்து, கடந்த அக்டோபரில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 8.78 பில்லியன் டாலராக, அதாவது, 64 ஆயிரத்து, 972 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வாறு அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|