பதிவு செய்த நாள்
03 நவ2020
22:04
புதுடில்லி:கடந்த அக்டோபரில், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளில், 22 ஆயிரத்து, 33 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள்.
பொருளாதாரம் மீட்சிஅடைய துவங்கியது, மற்றும் சிறப்பான காலாண்டு முடிவுகள் ஆகியவை காரணமாக, அன்னிய முதலீட்டாளர்கள், அக்டோபரில் அதிகளவிலான முதலீடுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இதுவே, கடந்த செப்டம்பர் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், 3,419 கோடி ரூபாயை சந்தையிலிருந்து திரும்ப எடுத்துள்ளனர்.
அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த அக்டோபர் மாதத்தில், பங்குகளில், 19 ஆயிரத்து, 541 கோடி ரூபாயையும்; கடன் பத்திரங்களில், 2,492 கோடி ரூபாயையும் முதலீடு செய்திருக்கின்றனர். மொத்தம், 22 ஆயிரத்து, 33 கோடி ரூபாய் முதலீட்டை மேற்கொண்டுள்ளனர்.
உலக சந்தைகளில் உபரி பணப்புழக்கம் கிடைத்த காரணத்தினால், அதை இந்திய சந்தைகளில் முதலீடு செய்திருக்கின்றனர்.மேலும், பொருளாதார செயல்பாடுகள் மீண்டும் துவங்கி இருப்பது மற்றும் எதிர்பார்த்ததை விட சிறப்பான காலாண்டு முடிவுகள் ஆகியவையும், அன்னிய முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|