பதிவு செய்த நாள்
03 நவ2020
22:20
மும்பை:அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, உலக சந்தைகளில் சாதகமான போக்கு ஏற்பட்டதை அடுத்து, அதன் தொடர்ச்சியாக, இந்திய சந்தைகளும், நேற்று உயர்வை சந்தித்தன. மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., ஆகிய நிறுவன பங்குகள் விலை அதிகரித்ததும், சந்தையின் உயர்வுக்கு துணை போகின.
நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 503.55 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 40,261.13 புள்ளிகளில் நிலைபெற்றது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடும், 144.35 புள்ளிகள் அதிகரித்து, 11813.50 புள்ளிகளில் நிலை பெற்றது.சென்செக்ஸ் குறியீட்டு பிரிவில், ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவன பங்குகள், 6 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்தன.
இதனையடுத்து, எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., பவர்கிரிட், சன்பார்மா, இண்டஸ்இண்ட் பேங்க், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி., வங்கி ஆகிய நிறுவன பங்குகள் விலை அதிகரித்தன.மாறாக, என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, எச்.சி.எல்., டெக், இன்போசிஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டன.
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, உலக சந்தைகளில் சாதகமான போக்கு ஏற்பட்டதை அடுத்து, அது, இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்ததாக, பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|