பதிவு செய்த நாள்
04 நவ2020
21:46
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, தொடர்ந்து, 7 மாதங்களாக சரிவைக் கண்டு வந்த நிலையில், அக்டோபர் மாதத்தில், முதன் முறையாக உயர்வைக் கண்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, வணிகச் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளானது; புதிய ஆர்டர்கள் குறைந்தது போன்ற காரணங்களால், கடந்த, 7 மாதங்களாக,சேவைகள் துறை வளர்ச்சியில் சரிவு காணப்பட்டது.ஆள் குறைப்புபின், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது; சந்தை நிலை மேம்பட்டது ஆகிய காரணங்களால், அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இம்மாதத்தில் குறியீடு, 54.1 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
‘ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 49.8 புள்ளிகளாகக் குறைந்திருந்த நிலையில், அக்டோபரில், 54.1 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.
இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், வளர்ச்சியையும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவையும் குறிக்கும்.நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து துவங்கி விட்ட நிலையில், தற்போது சேவைகள் துறையின் வளர்ச்சியும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது.சேவைகள் துறைக்கு புதிய ஆர்டர்கள் கிடைத்துள்ளன. தேவை வலுப்பட்டு வரும் நிலையில், சந்தைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன.
அதேசமயம், வேலைவாய்ப்பை பொறுத்தவரை, அக்டோபர் மாதத்திலும் ஆள் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட, செப்டம்பர் மாத அளவுக்கு நிகராக, அக்டோபரிலும் ஆள் குறைப்பு நடைபெற்றுள்ளது. வலுவான நிலைஉற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் உள்ள நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் தொடக்கத்தில், குறைந்த அளவிலான ஊழியர்கள் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.
இதன் விளைவாக, தனியார் துறை வேலைவாய்ப்பு, தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக குறைந்துள்ளது.மேலும் கொரோனா காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற ஊழியர்களில் பலர், இன்னும் பணிக்கு திரும்பாமல் உள்ளனர்.விலை நிலவரங்களைப் பொறுத்தவரை, உள்ளீட்டு செலவு, எட்டு மாதங்களில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
ஆனால், சேவைகளுக்கான கட்டணங்களில் அந்த அளவுக்கு விலை அதிகரிப்பு இல்லை.தயாரிப்பு துறை உற்பத்தி மற்றும் சேவைகள் துறை உற்பத்தி ஆகிய இரண்டும் சேர்ந்த வளர்ச்சி, கடந்த செப்டம்பரில், 54.6 புள்ளிகளாக இருந்த நிலையில், அக்டோபரில், 58.0 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.இது, கடந்த, 9 ஆண்டுகளில், தனியார் துறை உற்பத்தியில் வலுவான நிலையை குறிப்பதாக இருக்கிறது.
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில், இந்திய சேவைகள் துறையும் வளர்ச்சி கண்டிருப்பது ஊக்கமளிப்பதாக இருக்கிறது. கொரோனா பாதிப்புகளினால் ஏற்பட்ட சரிவுகளிலிருந்து, பொருளாதார நிலைமைகள் மீட்சி அடைவதை இது உணர்த்துவதாக இருக்கிறது.பொலியானா டி லிமா, பொருளாதார இணை இயக்குனர், ஐ.எச்.எஸ்., மார்க்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|