பதிவு செய்த நாள்
05 நவ2020
20:54
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்சில், சவுதி அரேபியாவின், ‘பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்டு’ எனும் முதலீட்டு நிதியம், 9,555 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களில், ரிலையன்ஸ், 47 ஆயிரத்து, 265 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது.இந்த நிதியம், 9,555 கோடி ரூபாயை முதலீடு செய்வதை அடுத்து, அதற்கு, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின்,2.04 சதவீத பங்குகள் கிடைக்கும். இது ரிலையன்ஸில், சவுதி நிதியத்தின் இரண்டாவது முதலீடாகும்.
இதற்கு முன், இந்த நிதியம், ஜியோ பிளாட்பார்மில், 11 ஆயிரத்து, 367 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இது குறித்து, இந்த நிதியம் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவின் சில்லரை வர்த்தக துறை, உலகின் மிகப் பெரியதாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு, 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்த முதலீடு, மாறிவரும் இந்திய பொருளாதாரத்தில், நிதியம் இருப்பதை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். இவ்வாறு தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி கூறியிருப்பதாவது: நாட்டின், 130 கோடி மக்கள் மற்றும் லட்சக்கணக்கான சிறு வணிகர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும் வகையில், நாட்டின் சில்லரை வணிக துறையை மாற்றுவதற்கான எங்களின் லட்சிய பயணத்தில், சவுதி அரேபியாவின் நிதியமும் இணைவதை வரவேற்கிறேன். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|