பதிவு செய்த நாள்
08 நவ2020
21:31
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சரிவைச்சந்தித்த நிலையில், இரண்டாம் காலாண்டில் வீடுகள் விற்பனை அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான, ‘இக்ரா’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் எட்டு முக்கிய நகரங்களில், இரண்டாம் காலாண்டில் வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது. இது, சகஜ நிலை திரும்பி வருவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
பொது முடக்கம் படிப்படியாக விலக்கி கொள்ளப்படுவது, தேவை அதிகரிப்பு, வீட்டு கடன்களுக்கான குறைந்த வட்டி விகிதம், சலுகைகள், தள்ளுபடிகள் ஆகிய அம்சங்கள், விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பாதிப்பால், நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஆண்டு அடிப்படையில், இரண்டாம் காலாண்டில் வீடுகள் விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
சொந்த வீடு வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டி வருவதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.வீடு வாங்குபவர்கள் மத்தியில், மூன்று மற்றும் அதற்கு மேல் படுக்கையறை கொண்ட வீடுகள் வாங்குவதும் அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழலில் பலரும், அலுவலுக்கான வசதி கொண்ட வீட்டை நாடுகின்றனர். வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், சொந்த நாட்டில் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|