இந்தியா மிளிரத்தொடங்கி விட்டதா?இந்தியா மிளிரத்தொடங்கி விட்டதா? ...  புத்தாண்டில் உயர்கிறது போன் கட்டணம் தொலைதொடர்பு நிறுவனங்கள் திட்டம் புத்தாண்டில் உயர்கிறது போன் கட்டணம் தொலைதொடர்பு நிறுவனங்கள் திட்டம் ...
வியத்தகு மாற்றத்தை காண்கிறேன் பாராட்டும் ஆனந்த் மகிந்திரா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2020
20:59

புதுடில்லி:மத்திய அரசு, உற்பத்தியுடன் ஒருங்கிணைந்த ஊக்க திட்டத்தை, மேலும், 10 துறைகளுக்கும் அறிவித்திருப்பது, தொழில்துறை மீதான அதன் அணுகுமுறையில், வியத்தகு மாற்றத்தை காட்டுகிறது என, மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.

கடந்த, 11ம் தேதியன்று, மத்திய அமைச்சரவை, 'பி.எல்.ஐ.,' எனும், உற்பத்தியுடன் ஒருங்கிணைந்த ஊக்க திட்டத்தை, கூடுதலாக மேலும், 10 துறைகளுக்கு அறிவிப்பதற்கு அனுமதி வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளில், 1.46 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். மற்றொரு பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ், ஏற்கனவே, 51 ஆயிரத்து, 311 கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:நான், 'கேம் சேஞ்சர்' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதில்லை. ஆனால், இந்த திட்டத்திற்கு அது பொருத்தமானது.என்னைப் பொறுத்தவரை, இந்த திட்டத்தின் செயல்முறைகளை விட, முக்கியமானதாக நான் கருதுவது, தொழில்துறை மீதான அணுகுமுறையில் உள்ள வியத்தகு மாற்றத்தை தான்.

இத்திட்டத்தின் கொள்கைகள், தொடர்ச்சியாகவும், வெளிப்படையாகவும் பயன்படுத்தப் பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட துறையை சேர்ந்த தொழில்கள், சவால்களை சந்திக்கும் அளவுக்கு உயரும் என நான் நம்புகிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)