முக்கிய 8 துறைகள்  வளர்ச்சியில் தொய்வு முக்கிய 8 துறைகள் வளர்ச்சியில் தொய்வு ...  காப்பீட்டு நிறுவனங்களின் இணைப்புக்கு அனுமதி காப்பீட்டு நிறுவனங்களின் இணைப்புக்கு அனுமதி ...
ருச்சி சோயா நிர்வாகத்தில் பாபா ராம்தேவ் சகோதரர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2020
20:42

புதுடில்லி:‘ருச்சி சோயா’ நிறுவனத்தை,‘பதஞ்சலி’ கையகப்படுத்திய நிலையில், அதன் நிர்வாகக் குழுவில், பாபா ராம்தேவ், அவரது இளைய சகோதரர் ராம் பாரத், நண்பர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா ஆகியோர் இணைகின்றனர்.

மேலும், ருச்சி சோயாவின் நிர்வாக இயக்குனராக, ராம் பாரத் நியமிக்கப்பட்டுள்ளார்.ருச்சி சோயா இண்டஸ்ட்ரீசின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம், கடந்த ஆகஸ்ட், 19ம் தேதியன்று நடைபெற்றது. அதில், 2022 டிசம்பர், 17 வரை, ராம் பரத் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.


இதையடுத்து, இந்நிறுவனத்தில் அவரது பதவி, முழுநேர இயக்குனர் என்பதிலிருந்து, நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டது.இந்த நியமனத்துக்கு, பங்குதாரர்கள் அனுமதியும் தேவை என்பதால், அவர்களிடம் தற்போது அனுமதி கோரப்பட்டு உள்ளது. ராம் பாரத் சம்பளம், ஆண்டுக்கு, 1 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், ஆச்சார்ய பாலகிருஷ்னா, நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சம்பளமும், ஆண்டுக்கு, 1 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர, மேலும் சிலரும் செயல்சாரா இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடனில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த, ருச்சி சோயா நிறுவனத்தை, கடந்த ஆண்டு, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், 4,350 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தியது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)