பதிவு செய்த நாள்
11 டிச2020
22:17
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, நம்பிக்கையூட்டும் விதமாக, கடந்த அக்டோபர் மாதத்தில், 3.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக சரிவைக் கண்டிருந்த நிலையில், இரண்டாவது மாதமாக தொடர்ந்து, தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியை கண்டுள்ளது. ரிசர்வ் வங்கி வலுவான வளர்ச்சி குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்திய நிலையில், அதற்கு தகுந்தாற்போல் தொழில் துறை உற்பத்தியும் வளர்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளதாவது:கடந்த அக்டோபர் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 3.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மின் உற்பத்தி துறை மற்றும் தயாரிப்பு துறை, மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டது, இதற்கு மிக முக்கிய
காரணமாக அமைந்துள்ளது.மின் உற்பத்தி துறை, 11.2 சதவீதமும்; தயாரிப்புத் துறை
3.5 சதவீதமும், அக்டோபர் மாதத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும் சுரங்கத் துறை, 1.5 சதவீத சரிவைக் கண்டிருக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|