பதிவு செய்த நாள்
17 டிச2020
21:26
புதுடில்லி:‘‘உருக்கு நிறுவனங்கள், அநியாயமாக உருக்கு விலையை உயர்த்தினால், அரசு வேடிக்கை பார்க்காது,’’ என, மத்திய குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர், நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.
டில்லியில், ‘அசோசெம்’ நிகழ்ச்சியில், நிதின் கட்கரி பேசியதாவது:கடந்த ஆறு மாதங்களில், உருக்கு விலை, 55 சதவீதம் உயர்ந்துள்ளது. 15 – 20 சதவீதம் விலையை உயர்த்தினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், உருக்கு நிறுவனங்கள் பல மடங்கு விலை உயர்த்தி கொள்ளை லாபம் அடிக்கின்றன. இதை அரசு வேடிக்கை பார்க்காது.
இது குறித்து, பிரதமர், மோடி, உருக்கு துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அரசின் கட்டுமான திட்டச் செலவில், உருக்கு, சிமென்ட் ஆகியவற்றின் பங்கு, 40 சதவீதமாக உள்ளது. இவற்றின் விலை உயர்வால், திட்டச் செலவு அதிகரிக்கிறது.
உருக்கு நிறுவனங்கள் விலையை குறைக்காவிட்டால், சிங்கப்பூர் நிறுவனத்தின், உருக்குக்கு நிகரான மாற்றுத் தொழில்நுட்ப உலோகத்தை, அரசு திட்டங்களில் பயன்படுத்தப்படும். அத்துடன், உருக்கு துறை தொடர்பான கொள்கைகளிலும் மாற்றம் செய்யப்படும். சுங்கச் சாவடிகளில், ‘ஜி.பி.எஸ்.,’ தொழில்நுட்பம் மூலம், பயண துாரத்தின் அடிப்படையில், தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|