‘ஸ்மார்ட்போன்’ விற்பனை  2 கோடியை தாண்டியது ‘ஸ்மார்ட்போன்’ விற்பனை 2 கோடியை தாண்டியது ...  வேளாண், மருந்து பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி வேளாண், மருந்து பொருட்கள் ஏற்றுமதியில் வளர்ச்சி ...
உருக்கு விலை உயர்வு நிதின் கட்கரி எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2020
21:26

புதுடில்லி:‘‘உருக்கு நிறுவனங்கள், அநியாயமாக உருக்கு விலையை உயர்த்தினால், அரசு வேடிக்கை பார்க்காது,’’ என, மத்திய குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர், நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்.

டில்லியில், ‘அசோசெம்’ நிகழ்ச்சியில், நிதின் கட்கரி பேசியதாவது:கடந்த ஆறு மாதங்களில், உருக்கு விலை, 55 சதவீதம் உயர்ந்துள்ளது. 15 – 20 சதவீதம் விலையை உயர்த்தினால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், உருக்கு நிறுவனங்கள் பல மடங்கு விலை உயர்த்தி கொள்ளை லாபம் அடிக்கின்றன. இதை அரசு வேடிக்கை பார்க்காது.


இது குறித்து, பிரதமர், மோடி, உருக்கு துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அரசின் கட்டுமான திட்டச் செலவில், உருக்கு, சிமென்ட் ஆகியவற்றின் பங்கு, 40 சதவீதமாக உள்ளது. இவற்றின் விலை உயர்வால், திட்டச் செலவு அதிகரிக்கிறது.


உருக்கு நிறுவனங்கள் விலையை குறைக்காவிட்டால், சிங்கப்பூர் நிறுவனத்தின், உருக்குக்கு நிகரான மாற்றுத் தொழில்நுட்ப உலோகத்தை, அரசு திட்டங்களில் பயன்படுத்தப்படும். அத்துடன், உருக்கு துறை தொடர்பான கொள்கைகளிலும் மாற்றம் செய்யப்படும். சுங்கச் சாவடிகளில், ‘ஜி.பி.எஸ்.,’ தொழில்நுட்பம் மூலம், பயண துாரத்தின் அடிப்படையில், தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)