வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நொய்டா ஆலையை மூடும் ஹோண்டா மோட்டார்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 டிச2020
21:17
புதுடில்லி:ஹோண்டா மோட்டார் கார்ஸ் நிறுவனம், நொய்டாவில் உள்ள அதன் ஆலையை மூடி விட முடிவெடுத்துள்ளது.
கடந்த, 23 ஆண்டு களாக செயல்பட்டு வரும் இந்த ஆலையை, கடுமையான போட்டி மற்றும் சவாலான வணிகச் சூழல் ஆகியவை காரணமாக மூடிவிடும் முடிவிற்கு வந்துள்ளது, ஹோண்டா. கடந்த, 1997ம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்த ஆலை, ஆண்டுக்கு, ஒரு லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாகும்.
கடுமையான நிதிச் சிக்கலில் மாட்டியிருக்கும் ஹோண்டா, அனாவசியச் செலவுகளைக் குறைக்கவும்; சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், இந்த ஆலையை மூட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த முடிவை முன்னிட்டு, கடந்த மாதமே, ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்திருப்பதாகவும் தெரிகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 19,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 19,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 19,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 19,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!