பதிவு செய்த நாள்
02 ஜன2021
22:53
கோல்கட்டா:எரிபொருள் விற்பனை அதிகரித்திருப்பது, பொருளாதார மீட்சியை உணர்த்துவதாக இருக்கிறது என, ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்’ தெரிவித்துள்ளது.
‘கொரோனா தொற்று நோய் காரணமாக, வணிக நெருக்கடிகளில் இடையூறுகள் இருந்த போதிலும், கடந்த ஆண்டில், மோட்டார் ஸ்பிரிட் மற்றும் டீசல் விற்பனை அதிகரித்துஉள்ளது. ‘இது பொருளாதாரத்தின் மறுமலர்ச்சியை குறிப்பதாக இருக்கிறது’ என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் குர்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த 2020ம் ஆண்டில், மோட்டார் ஸ்பிரிட் விற்பனை முந்தைய ஆண்டை விட, 108 சதவீதமும்; டீசல், 96 சதவீதமும் அதிகரித்துள்ளது.கொரோனா காரணமாக, நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்த நிலையிலும், சமையல் எரிவாயு தேவை கிட்டத்தட்ட, 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு, நிறுவனத்தை டிஜிட்டல்மயமாக்கம் செய்வதற்கான ஆண்டாக அமைந்தது. இது, தடையற்ற வர்த்தக விற்பனையை தொடர்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|