போட்டியில் குதிக்கும் ‘டாடா’ குழுமம் போட்டியில் குதிக்கும் ‘டாடா’ குழுமம் ...  கொரோனா தாக்கம் காரணமாக வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு கொரோனா தாக்கம் காரணமாக வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘செபி’ அனுமதியால் உயர்ந்த பியூச்சர் நிறுவன பங்கு விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
20:55

புதுடில்லி:ரிலையன்ஸ் நிறுவனத்துடனான, பியூச்சர் குழுமத்தின் ஒப்பந்தத்துக்கு, ‘செபி’ அனுமதி வழங்கியதை அடுத்து, நேற்று, பியூச்சர் ரீடெய்ல், பியூச்சர் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்து, அதிகபட்ச விலை வரம்பை எட்டியது.

இதே போல், மும்பை பங்குச் சந்தையும், இந்த இரு நிறுவனங்களின் டீலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.‘ரிலையன்ஸ் ரீடெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை வர்த்தகம், மொத்த வர்த்தகம், கிடங்குகள் ஆகியவற்றை, 24,713 கோடிக்கு வாங்கிக் கொள்வதாக அண்மையில் ஒப்பந்தம் செய்தது.

சில்லரை வணிகம்

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, பியூச்சர் குழுமத்தின், ‘பிக் பஜார், ஈஸிடே’ உள்ளிட்டவை, ரிலையன்ஸ் வசமாகும். மேலும் கிடங்கு வசதியும் அதிகரிக்கும். இதன் மூலம் சில்லரை வணிகத்தில், ரிலையன்ஸ் நிலை இருமடங்கு அதிகரித்து, போட்டி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறும் என, எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அமேசான் நிறுவனம், இந்த விற்பனை செல்லாது என அறிவிக்க கோரி, சிங்கப்பூரிலுள்ள சர்வதேச நடுவர் மன்றத்தை அணுகி, தடை பெற்றது. மேலும், இவ்விவகாரம் உயர் நீதிமன்றத்திற்கும் சென்றது.

ஒப்பந்தத்துக்கு அனுமதி

அத்துடன், செபி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளிடமும், இந்த டீலுக்கு தடையில்லா சான்று வழங்கக் கூடாது என, அமேசான் கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந் நிலையில் உயர் நீதிமன்றம், கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்த டீல் குறித்த முடிவுகளை எடுக்கலாம் என அறிவித்தது.இதையடுத்து, தற்போது பியூச்சர் குழுமத்தின் இந்த விற்பனை ஒப்பந்தத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது செபி. இதன் காரணமாக, நேற்று, பியூச்சர் நிறுவன பங்குகள் விலை, அதிகபட்ச விலை வரம்பை தொட்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)