கொரோனா தாக்கம் காரணமாக வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு கொரோனா தாக்கம் காரணமாக வீடுகள் பரப்பளவு அதிகரிப்பு ...  பங்குகளை அரசு குறைக்க வேண்டும் பங்குகளை அரசு குறைக்க வேண்டும் ...
சீன கடன் செயலிகள் அதிகரிக்கும் அரசின் கிடுக்கிப்பிடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
21:54

புதுடில்லி:ஆன்லைன் மூலம் கடன் வழங்கி வரும் நிறுவனங்கள் மீது அரசின் கிடுக்கிப்பிடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீன நிறுவனங்கள் மீது கண்காணிப்பை அதிகரித்து உள்ளது.

முயற்சி

இதன் தொடர்ச்சியாக, சீனாவை சேர்ந்த ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்களான, ‘ஸ்னாப்இட் லோன்’, ‘பபுள் லோன்’, ‘கோ கேஷ்’, ‘பிளிப்கேஷ்’ உள்ளிட்ட பல நிறுவனங்களின் தரவுகளை சோதனையிடும் முயற்சியில் அரசு இறங்கி உள்ளது.மேலும், மொபைல் செயலி மூலமாக கடன் வழங்கிவரும் கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் மீது அமலாக்கத் துறை, மத்திய குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

மேலும், அவற்றின் பணப்பரிவர்த்தனை செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப் பட்டு உள்ளன.அத்துடன், இத்தகைய சீன நிறுவனங்களின் கணக்குகளை முடக்குமாறு, பேடிஎம், ரேஸர்பே ஆகிய நிறுவனங்களை புலனாய்வு துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அனுமதி

சமீபகாலமாக, போன் செயலி மூலம் கடன் வழங்கி வரும் இத்தகைய நிறுவனங்கள், விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், வாடிக்கையாளர்களின் தரவுகளை அனுமதி இன்றி பயன்படுத்திக் கொள்வதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

கடன் வாங்கியவரின் போனிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் தொலைபேசி எண்களை அனுமதியின்றி எடுத்து, கடனை திருப்பிச் செலுத்த தாமதமானால், அந்த எண்களுக்கு போன் செய்து, அவமானப்படுத்தும் செயல்களும் அதிகரித்து உள்ளன.இதன் காரணமாக, கடன் வாங்கிய சிலர், அவமானத்தால் தற்கொலை செய்திருக்கின்றனர். இதையடுத்து, ரிசர்வ் வங்கி, இச்செயலிகளை முறைப்படுத்த ஒரு செயற்குழுவை நியமித்துஉள்ளது.

கூகுள் நிறுவனமும், 60க்கும் மேற்பட்ட இத்தகைய செயலிகளை, விதிமுறைகளை மீறியதாக கூறி, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)