வெளிநாடுகளுக்குஇரும்புத்தாது ஏற்றுமதி:  மூலப்பொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்புவெளிநாடுகளுக்குஇரும்புத்தாது ஏற்றுமதி: மூலப்பொருள் தட்டுப்பாடு ... ...  ‘வாகன காப்பீட்டு நடைமுறை வெளிப்படையானதாக இல்லை’ ‘வாகன காப்பீட்டு நடைமுறை வெளிப்படையானதாக இல்லை’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தேவையின் அடிப்படையில் வழங்கலாம் சலுகை: பொருளாதார இலக்குக்கு நெருக்கடி தராது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2021
14:40

வங்கிகளில் பல்வேறு தேவைகளுக்காக கடன்கள் வழங்கப்படுகின்றன. படிக்கும் மாணவர்கள் வசதிக்காக கல்விக் கடன், தொழில் துவங்குவதற்கு என, பலவித கடன்கள் வழங்குவதும், சில சமயங்களில் தள்ளுபடி செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

அதேசமயம், இதற்கான நிதியை பிற வழிகளில் அரசு ஈடுசெய்ய வேண்டியுள்ளது. அரசுக்கு ஏற்படும் நிதிச்சுமை, பொதுமக்களுக்கு வேறு வழிகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால், தேவையின் அடிப்படையில் தள்ளுபடி போன்ற சலுகைகளை வழங்கினால், பொருளாதர இலக்கில் பாதிப்பு இருக்காது என்கின்றனர், பொருளாதார நிபுணர்கள்.

இதுகுறித்து, ஆடிட்டர் கார்த்திகேயன் கூறியதாவது:குறிப்பிட்ட காரணத்துக்காக கடன் தள்ளுபடி என்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவில், 46 சதவீதம் மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். குறிப்பாக, 87 சதவீத விவசாயிகள் இரண்டு ஏக்கருக்கு கீழ் இருப்பவர் (மார்ஜினல்), ஐந்து ஏக்கருக்கு கீழ் இருப்பவர் (சிறு விவசாயி) என, இரு பிரிவுகளுக்கு தள்ளுபடி என்பது பேருதவியாக இருக்கும்.அடிப்படை எதுவும் இல்லாமல் தள்ளுபடி என்பது அரசுக்கு நிதிச்சுமையை அதிகரிக்கும். எந்த அரசு வந்தாலும் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை விவசாய கடன் தரப்படுவதால், தள்ளுபடி காரணத்துக்காக தேவையே இல்லாமல் கடன் வாங்கியவர்களும் உண்டு.

எனவே அடிப்படையை வகுத்து, தேவையின் அடிப்படையில் தள்ளுபடி செய்வது பயனுள்ளதாக இருக்கும். வணிக வங்கிகளில், 2018 – 19ம் ஆண்டு புள்ளி விபரப்படி, ஒரு லட்சத்து, 64 ஆயிரம் கோடி விவசாய கடன் தரப்பட்டுள்ளது.பொதுவாக, நிலம் சொந்தமாக இருப்பவர் பெயரில்தான் கடன் வாங்க முடியும். குத்தகைக்கு இருப்பவர்களுக்கு கிடைக்காது. விவசாய கடன், விவசாயம் செய்பவர்களுக்கே சென்றுசேர வேண்டும்.

ஆனால், நில உரிமையாளர்களுக்கே விவசாய கடன் செல்வது தேவையான பலனை தராது.அதேபோல், வசதி இல்லாதவர்கள் படிப்பை தொடர கல்விக்கடன் தருவது வரவேற்கத்தக்கது. கல்விக்கடன் தள்ளுபடி என்பது, மாணவர்கள் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காதவர்களுக்கு தள்ளுபடி செய்யலாம் அல்லது வேலை கிடைக்கும் வரை வட்டி தள்ளுபடி செய்யலாம்.வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன்களில், அரசு தள்ளுபடி செய்யும்போது வங்கிகள் நஷ்டமாக ஏற்காது. அரசு இதற்கான நிதியை வங்கிகளுக்கு வழங்குகிறது. நிதி பற்றாக்குறையை சமநிலைப்படுத்த வேறுவிதமான வரி விதிப்பு, பத்திரப்பதிவு, போக்குவரத்து துறை உள்ளிட்டவற்றில் கட்டணத்தை உயர்த்தப்படும்.ஒரு வேளை கட்டணம் உயர்த்தாத பட்சத்தில், வளர்ச்சிப் பணிகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் நிதியில் ஒரு பகுதியை எடுத்து செலவு செய்ய வேண்டியிருக்கும். நிதிச்சுமை என்பது, பொருளாதார வளர்ச்சியில் நினைத்த இலக்கை எட்ட தடைக்கல்லாக இருக்கும்.

பெரும்பாலானோர் கடன் செலுத்தும் குறிக்கோளுடன் இருக்கின்றனர். அரசுக்கு நிதிச்சுமையை கட்டுப்படுத்த, தேவையின் அடிப்படையில் தள்ளுபடி செய்வதுடன், வட்டி விகிதத்தில் குறைப்பு, தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)