‘வாகன காப்பீட்டு நடைமுறை வெளிப்படையானதாக இல்லை’ ‘வாகன காப்பீட்டு நடைமுறை வெளிப்படையானதாக இல்லை’ ...  சென்னையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்னையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாராக் கடன்களுக்கு தனி வங்கி: பொறுப்பை தட்டி கழிக்கும் முயற்சியா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2021
14:47

வங்கிகளில் தேங்கிப் போயுள்ள வாராக் கடன்களை வசூலிக்கவென்றே, தனியே ஒரு வங்கியை உருவாக்கும் நிலை ஏற்பட்டால், அதை, ரிசர்வ் வங்கி எதிர்க்காது என்று கருத்து தெரிவித்துள்ளார், ஆளுநர் சக்திகாந்த தாஸ்.

பொதுத் துறை, தனியார் துறை வங்கிகள் அனைத்திலும் வாராக் கடன் அளவு பெருகப் போகிறது. இது தொடர்பான, இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று நம்மை எச்சரித்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், 7.5 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன், வரும் செப்டம்பர் மாதத்துக்குள், 13.5 சதவீதத்தைத் தொடப் போகிறது. 



அமெரிக்காவில்

பொருளாதாரச் சரிவு மோசமாக இருக்குமானால், வாராக் கடன், 14.8 சதவீதத்தைத் தொடலாம். இதிலும், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 17.6 சதவீதமாக உயரக்கூடும்.


இந்நிலையில் தான், 'வாராக் கடன்களை வசூலிக்கும் வங்கி' என்ற பொருளில் சொல்லப்படும் 'பேடு பேங்க்' திட்டம் பேசப்படுகிறது. 1988ல், அமெரிக்காவில் இந்த வங்கி தோன்றியது. தற்போது, சுவீடன், பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில், இத்தகைய வங்கிகள் செயல்படுகின்றன. அங்கே உள்ளதை அப்படியே இங்கேயும் இறக்குமதி செய்ய திட்டம் தீட்டப்படுகிறது.வாராக் கடன்கள் பெரும் சுமையாக மாறி, வங்கிகளை செயல்படவிடாமல் அழுத்துகின்றன. புதிய கடன்களையோ, முயற்சிகளையோ தைரியமாக அவற்றால் எடுக்க முடியவில்லை. அதனால், வாராக் கடன்களை மட்டும் பிரித்து, இன்னொரு வங்கியிடம் ஒப்படைத்துவிட்டால், அது, கடன் வசூலைப் பார்த்துக்கொள்ளும். வசூலிக்கும் தொந்தரவு இல்லாமல், பெரிய வங்கிகள் தொடர்ந்து கடன் கொடுத்துக் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.


வழியல்ல
உண்மையில், ரகுராம் ராஜன் சொன்னது போல், இது ஒரு கையில் இருக்கும் கடனை, இன்னொரு கைக்கு மாற்றிவிடுவதைத் தவிர வேறில்லை. பிரச்னையை ஒத்திப் போடுகிறோமே தவிர, தீர்ப்பதற்கு இது வழியல்ல.இதனால், ஏற்படக்கூடிய பல்வேறு பின்விளைவுகளைப் பற்றியும் யோசிக்க வேண்டும்.அதாவது, கடன் கொடுப்பவர்களுக்குத் தான் வசூலிக்கும் பொறுப்பும் இருக்க வேண்டும்.இரண்டும் தனித்தனியாகப் பிரியுமானால், கடன் கொடுக்கும் அதிகாரிகளுக்கு என்ன பொறுப்பு இருக்க முடியும்? 


இன்றைக்கும் பல்வேறு உள்ளூர் பெனிபிட் பண்டுகளைப் பாருங்கள். அங்கே கடன் வாங்க வருபவர்களின் மூன்று தலைமுறை ஜாதகத்தைக் கூட தெரிந்து வைத்துக்கொண்டு தான் கடனே கொடுப்பார்கள். அவர்களுடைய வாராக் கடன் விகிதம் மிகமிகக் குறைவு.வாராக் கடனுக்காக தனியாக ஒரு வங்கி என்பது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்கான முயற்சி. வங்கியின் நிதி நிலைமை எப்போதும் வலிமையாக இருப்பதாக காட்டுவதற்கான பம்மாத்து. கடனும், வசூலும் இரண்டு கண்கள். இரண்டையும் இரண்டு திசைகளில் பார்க்க வைத்தால், எதிர்காலம் கண்ணுக்கு தெரியாமல் போய்விடக்கூடும்.

-- நமது நிருபர் -

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)