பதிவு செய்த நாள்
04 பிப்2021
21:40
சென்னை:வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க, வங்கிகளுக்குள், உள்குறை தீர்ப்பாளரை நியமித்து, அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி தரப்பில் கூறியதாவது:வங்கிகளில், டெபிட், கிரெடிட் கார்டு, காசோலை, பணப் பரிவர்த்தனை, வீட்டுக் கடன், தனிநபர் கடன் உட்பட, பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.இவற்றில், வாடிக்கையாளர்களுக்கு சில சமயங்களில் சேவை குறைபாடு ஏற்படுகிறது. இதனால், அவர்களின் குறைகளை தீர்க்க, 1995ல் வங்கி குறை தீர்ப்பாளர் சேவை ஏற்படுத்தப்பட்டது.
அதன் பின், 2019ல், 24 மணி நேரமும் செயல்படக் கூடிய புகார் மேலாண்மை மையம் துவங்கப்பட்டது. முற்றிலும் தானியங்கி முறையில் இந்த புகார் மையம் செயல்படுகிறது. வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க, வங்கிகளுக்குள் உள்குறை தீர்ப்பாளரை, அதன் நிர்வாகம் நியமிக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
மேலும், வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்க, கூடுதல் கவனம் செலுத்தி, வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, கூறப்பட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|