பதிவு செய்த நாள்
12 பிப்2021
22:11
புதுடில்லி:கோல்கட்டாவைச் சேர்ந்த, ‘ருயா’ குழுமம், ‘ஏர் இந்தியா’வின், 100 சதவீத பங்குகளை வாங்குவதற்கு, தன் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, ‘டாடா’ குழுமம், ஏர் இந்தியா ஊழியர் கூட்டமைப்பு ஆகியவை, ஏர் இந்தியாவை வாங்குவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், களத்தில் போட்டியாக இறங்கியிருக்கிறது, ருயா குழுமம். ருயா குழுமத்தின் முந்தைய தலைவர் பவன் ருயா, நலிவுற்ற நிறுவனங்களை வாங்கி, அவற்றை லாப பாதைக்கு திருப்பிய அனுபவம் கொண்டவர்.
குறிப்பாக, ‘டன்லப் இந்தியா, பால்கன் டயர்ஸ், ஜெஸோப் அண்டு கம்பெனி’ போன்றவற்றை கையகப்படுத்தி, மிகக் குறுகிய காலத்தில் மீட்சியை ஏற்படுத்தியவர். மேலும், ஜெஸோப் நிறுவன விவகாரத்தில் கைதாகி சிறையும் சென்றவர், பவன் ருயா.
இதற்கிடையே, 2016ல், மேற்கு வங்க அரசு, டன்லப் மற்றும் ஜெஸோப் ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்த இருப்பதாக அறிவித்தது. இருப்பினும், இன்னும் ஜனாதிபதியின் அனுமதிக்காக, மாநில அரசு காத்திருக்கிறது.தற்போது, பவன் ருயாவின் மகன் ராகவ் ருயா, நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|