பதிவு செய்த நாள்
12 பிப்2021
22:13
புதுடில்லி:‘டுவிட்டர்’ செயலிக்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும், இந்திய தயாரிப்பான, ‘கூ’ செயலியில் முதலீடு செய்வதற்கு, இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள்ளாகவே, 30 லட்சம் பேர், ‘கூ’ செயலியை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். ஒரு பக்கம் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், முதலீடு செய்ய விரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
‘புக் மை ஷோ’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆஷிஷ் ஹெம்ராஜனி மற்றும் ஜெரோதா நிறுவனத்தின் நிகில் காமத் ஆகியோர், ‘கூ’வில் முதலீடுகளை மேற்கொண்டு உள்ளனர்.இதற்கு முன், முந்தைய தயாரிப்புகளுக்காக, இந்நிறுவனத்தில் சீனாவைச் சேர்ந்த, ‘ஷன்வே’ நிறுவனம் முதலீடு செய்திருந்தது.
தற்போது மற்ற முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதால், ஷன்வே முழுமையாக வெளியேறி விடும் எனக் கூறப்படுகிறது.‘கூ’ நிறுவனத்தின் துணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறியதாவது:இந்தியாவைச் சேர்ந்த பலர் இதில் முதலீடு செய்து இருப்பதாகவும், ஷன்வே, தாய் நிறுவனத்திலிருந்து பங்குகளை விற்று வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
‘கூ’ முழுக்க இந்தியரால் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் பதிவு பெற்ற தயாரிப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.ராதாகிருஷ்ணா இதற்கு முன் நிறுவிய, ‘டாக்ஸி பார்ஷ்யூர்’ நிறுவனத்தை, பின்னர், ‘ஓலா’ வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|