கோத்ரேஜ் அறிமுகப்படுத்தும் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள்  கோத்ரேஜ் அறிமுகப்படுத்தும் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள் ...  வாரிச் சுருட்டும் கடன் செயலிகள்:  வாளாவிருக்கலாமா அரசு? வாரிச் சுருட்டும் கடன் செயலிகள்: வாளாவிருக்கலாமா அரசு? ...
பொதுத் துறை நிறுவனங்களை வாங்க ரூ.73 ஆயிரம் கோடியை திரட்டும் ‘வேதாந்தா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
20:43

புதுடில்லி:மத்திய அரசு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்கு தேவையான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கி இருப்பதாக, வேதாந்தா நிறுவனத்தின் தலைவர், அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவன பங்குகளை வாங்குவதற்கான நிதியை உருவாக்கும் வகையில், ‘வேதாந்தா’ நிறுவனம், லண்டனை சேர்ந்த, உலகளாவிய முதலீட்டு நிறுவனமான, ‘சென்ட்ரிகஸ்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்கிறது.இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, 10 பில்லியன் டாலர், அதாவது, கிட்டத்தட்ட, 73 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தொகுப்பை உருவாக்க உள்ளது.

இந்த நிதி தொகுப்பிலிருந்து, பொதுத்துறை நிறுவன பங்குகளில் முதலீடுகள் மேற்கொள்ளப் படும். இத்தகவலை, டுவீட் செய்துள்ள அனில் அகர்வால், மத்திய பட்ஜெட்டில், பங்கு விலக்கலுக்கு அதிக கவனம் செலுத்தி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், அரசின் இந்த முயற்சியில் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், ‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’, ‘பால்கோ இந்தியா’ ஆகிய நிறுவனங்களில், ஒரு ஊழியரைக் கூட வெளியேற்றாமல், பங்குகளை வாங்கி, நிறுவனத்தை மீட்டெடுத்தது குறித்தும் தெரிவித்துஉள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)