பதிவு செய்த நாள்
13 பிப்2021
20:43
புதுடில்லி:மத்திய அரசு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவற்றை வாங்குவதற்கு தேவையான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கி இருப்பதாக, வேதாந்தா நிறுவனத்தின் தலைவர், அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவன பங்குகளை வாங்குவதற்கான நிதியை உருவாக்கும் வகையில், ‘வேதாந்தா’ நிறுவனம், லண்டனை சேர்ந்த, உலகளாவிய முதலீட்டு நிறுவனமான, ‘சென்ட்ரிகஸ்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்கிறது.இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, 10 பில்லியன் டாலர், அதாவது, கிட்டத்தட்ட, 73 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தொகுப்பை உருவாக்க உள்ளது.
இந்த நிதி தொகுப்பிலிருந்து, பொதுத்துறை நிறுவன பங்குகளில் முதலீடுகள் மேற்கொள்ளப் படும். இத்தகவலை, டுவீட் செய்துள்ள அனில் அகர்வால், மத்திய பட்ஜெட்டில், பங்கு விலக்கலுக்கு அதிக கவனம் செலுத்தி இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், அரசின் இந்த முயற்சியில் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், ‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’, ‘பால்கோ இந்தியா’ ஆகிய நிறுவனங்களில், ஒரு ஊழியரைக் கூட வெளியேற்றாமல், பங்குகளை வாங்கி, நிறுவனத்தை மீட்டெடுத்தது குறித்தும் தெரிவித்துஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|