பதிவு செய்த நாள்
16 பிப்2021
11:53
வெளிநாடுகளை நம்பியிருக்காது தன்னிறைவு இந்தியாவாக உருவெடுக்க 'மேக் இன் இந்தியா' திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. சீனா போன்ற நாடுகளை சார்ந்திருக்காமல் உள்நாட்டு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகரித்து, பிற நாடுகளை திரும்பிப்பார்க்க வைப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று.
இதற்கு, மாவட்ட தொழில் மையங்களும் தொழில்முனைவோரை ஊக்குவித்து வளர்ச்சிக்கு வித்தாக அமைந்துள்ளன. தொழில் முனைவோரை மேம்படுத்தும் திட்டம், இளைஞர் மேம்பாட்டு திட்டம் என, பல்வேறு திட்டங்களில் கடன்பெற தொழில் துறையினர் வழிநடத்தப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, சிறு, குறு, தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவ்வகையில், மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின், 60 சதவீதம், மாநில அரசின், 40 சதவீத நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர், 18 வயது நிரம்பியவராகவும், குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும். நிறுவனத்தில், 10 தொழிலாளர்களுக்கு குறைவாக பணிபுரிய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
நிலத்தின் மதிப்பு திட்ட மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது. குத்தகை அல்லது வாடகைக்கான மதிப்பு (அதிகபட்சம், 3 ஆண்டுகள் வரை) சேர்த்துக் கொள்ளப்படுகிறது. புதிதாக தேங்காய் பொருட்கள் பதப்படுத்தும் குறுந்தொழில்கள் துவங்க, மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது.பயனாளிகள் சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதம் இருக்க வேண்டும். மீதமுள்ள தொகை, வங்கியில் இருந்து கடனாக வழங்கப்படும்.
இதன் வாயிலாக, தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிதாக தேங்காய் சார்ந்த நிறுவனங்களை ஆரம்பிப்பது, பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல் மற்றும் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தலுக்கு, 50 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் ஏற்கனவே இயங்கிவரும் தேங்காய் சார்ந்த பொருட்கள் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள், புதிதாக ஈடுபடவுள்ள குறு நிறுவனங்கள், தனி நபர்கள், http://pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, வியாழன் தோறும் நடக்கும் 'ஜூம் மீட்டிங்' இணையதளம் வழி யாக (ஐ.டி:79287703871, பாஸ்வோர்டு:Gmdic) தெரிந்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 8925533932-36 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|