சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்: ‘ஹயர் கூட்ஸ்’ தொழில் பிரகாசம்சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்: ‘ஹயர் கூட்ஸ்’ தொழில் பிரகாசம் ...  வளர்ச்சி 13.5 சதவீதம்  ‘நோமுரா’ கணிப்பு வளர்ச்சி 13.5 சதவீதம் ‘நோமுரா’ கணிப்பு ...
ஆத்ம பலம் தரும் ‛ஆத்ம நிர்பார் பாரத் அபியான்': ரூ.10 லட்சம் வரை மானியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2021
11:53

வெளிநாடுகளை நம்பியிருக்காது தன்னிறைவு இந்தியாவாக உருவெடுக்க 'மேக் இன் இந்தியா' திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. சீனா போன்ற நாடுகளை சார்ந்திருக்காமல் உள்நாட்டு உற்பத்தியையும், ஏற்றுமதியையும் அதிகரித்து, பிற நாடுகளை திரும்பிப்பார்க்க வைப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று.


இதற்கு, மாவட்ட தொழில் மையங்களும் தொழில்முனைவோரை ஊக்குவித்து வளர்ச்சிக்கு வித்தாக அமைந்துள்ளன. தொழில் முனைவோரை மேம்படுத்தும் திட்டம், இளைஞர் மேம்பாட்டு திட்டம் என, பல்வேறு திட்டங்களில் கடன்பெற தொழில் துறையினர் வழிநடத்தப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, சிறு, குறு, தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.



அவ்வகையில், மத்திய அரசின் 'ஆத்ம நிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை வலுப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின், 60 சதவீதம், மாநில அரசின், 40 சதவீத நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர், 18 வயது நிரம்பியவராகவும், குறைந்தபட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும். நிறுவனத்தில், 10 தொழிலாளர்களுக்கு குறைவாக பணிபுரிய வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.



நிலத்தின் மதிப்பு திட்ட மதிப்பீட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது. குத்தகை அல்லது வாடகைக்கான மதிப்பு (அதிகபட்சம், 3 ஆண்டுகள் வரை) சேர்த்துக் கொள்ளப்படுகிறது. புதிதாக தேங்காய் பொருட்கள் பதப்படுத்தும் குறுந்தொழில்கள் துவங்க, மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம் அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படுகிறது.பயனாளிகள் சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில், 10 சதவீதம் இருக்க வேண்டும். மீதமுள்ள தொகை, வங்கியில் இருந்து கடனாக வழங்கப்படும்.

இதன் வாயிலாக, தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிதாக தேங்காய் சார்ந்த நிறுவனங்களை ஆரம்பிப்பது, பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல் மற்றும் வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.


வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்தலுக்கு, 50 சதவீதம் மானியம் அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் ஏற்கனவே இயங்கிவரும் தேங்காய் சார்ந்த பொருட்கள் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள், புதிதாக ஈடுபடவுள்ள குறு நிறுவனங்கள், தனி நபர்கள், http://pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, வியாழன் தோறும் நடக்கும் 'ஜூம் மீட்டிங்' இணையதளம் வழி யாக (ஐ.டி:79287703871, பாஸ்வோர்டு:Gmdic) தெரிந்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 8925533932-36 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)