பதிவு செய்த நாள்
16 பிப்2021
21:17
மும்பை:இந்தியாவில், கொரோனா பாதிப்புகளுக்கு பிறகு, பொருளாதார செயல்பாடுகள், இயல்பு நிலைக்கு திரும்பி வருவதை அடுத்து, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 13.5 சதவீதம் அளவுக்கு உயரும் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த தரகு நிறுவனமான, ‘நோமுரா’ வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ், 7.7 சதவீத மாக இருக்கும் என்றும்; அடுத்த நிதியாண்டில், வளர்ச்சி, 10.5 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், அண்மையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ‘நோமுரா’ இவ்வாறு தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி, மைனஸ், 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது, ‘நோமுரா’.தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம், எளிதாகும் நிதி நிலைமைகள், ஆகியவற்றின் காரணமாக, பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், ‘நோமுரா’ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|