பதிவு செய்த நாள்
16 பிப்2021
21:19
புதுடில்லி:தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஜனவரி மாதத்திலும் நாட்டின் ஏற்றுமதி, வளர்ச்சி கண்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 6.16 சதவீதம் அதிகரித்து, 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்றிருக்கிறது. மருந்து மற்றும் பொறியியல் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்தது, இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி அதிகரித்திருப்பது போலவே, இறக்குமதியும் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 2 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், ஏற்றுமதி, அதிகளவில் அதிகரித்திருப்பதை அடுத்து, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, ஜனவரி மாதத்தில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்திருக்கிறது.
மருந்து மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி, முறையே, 16.4 சதவீதம், 19 சதவீதம் ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் புண்ணாக்கு, இரும்புத் தாது, புகையிலை, அரிசி, பழங்கள், தேயிலை, பிளாஸ்டிக் ஆகியவற்றின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளன. பெட்ரோலியப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், தோல் ஆகியவற்றின் ஏற்றுமதி, கணிசமாக சரிவைக் கண்டுள்ளது.தங்கம் இறக்குமதி, 115 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|