பதிவு செய்த நாள்
20 பிப்2021
21:52
புதுடில்லி:எஸ்.பி.ஐ., பேமென்ட்ஸ் நிறுவனம், வணிகர்களுக்காக, ‘யோனோ மெர்ச்சன்ட்’ எனும் செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ., வங்கியின் துணை நிறுவனமான, எஸ்.பி.ஐ., பேமென்ட்ஸ், குறைந்த கட்டணம் கொண்ட, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காக, ‘யோனோ மெர்ச்சன்ட்’ எனும், புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., மேலும் தெரிவித்துள்ளதாவது:அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2 கோடி வர்த்தகர்களுக்கு, இந்த குறைந்த கட்டணம் கொண்ட, டிஜிட்டல் சேவையை வழங்க
திட்டமிட்டுள்ளது.இதன் மூலம், மூன்றாம் மற்றும், நான்காம் நிலை நகரங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் நகரங்களிலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை
அதி கரிக்க உதவ முடியும்.இதற்காக, ‘விசா’ நிறுவனத்துடன், எஸ்.பி.ஐ., கூட்டு வைத்துஉள்ளது.
வங்கி, மூன்று ஆண்டுகளுக்கு முன், ‘யோனோ’ டிஜிட்டல் தளத்தை அறிமுகம் செய்தது. இதில், 3.58 கோடி பதிவு பெற்றவர்கள் உள்ளனர்.இவ்வாறு, எஸ்.பி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|