பதிவு செய்த நாள்
06 மார்2021
20:36
மும்பை:கொரோனா பிடிக்குள் சிக்கிய கடந்த ஆண்டில், தகவல் தொழில்நுட்ப துறையின் விற்பனையில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்; மூன்றாவது காலாண்டில், வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி, 2,692 தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை வைத்து ஆராய்ந்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், தகவல் தொழில்நுட்ப துறையில் விற்பனை, 5.2 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 1.06 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தேவைகள் அதிகரித்ததை அடுத்து, 1,685 தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை, 7.4 சதவீதம் அளவுக்கு, டிசம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய ஆறு காலாண்டுகளாக விற்பனையில் சரிவைக் கண்டிருந்த நிலையில், இந்த வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.உருக்கு, இரும்பு, வாகனம், சிமென்ட், ரசாயனம், மருந்து ஆகிய துறையை சேர்ந்த நிறுவனங்களின் மீட்சியால், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|