பதிவு செய்த நாள்
07 மார்2021
20:52
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, வங்கி மற்றும் நிதிச் சேவைகளை பெறுவதில் வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, நிதி நுட்ப நிறுவனங்கள் முற்றிலும் புதுமையான முறையில் நிதிச் சேவைகளை பெற வழி செய்கின்றன.
இவற்றில், நியோ வங்கிகள் என குறிப்பிடப்படும் புதுயுக வங்கி செயலிகள், அண்மை காலமாக கவனத்தை ஈர்த்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த வகை செயலிகளின் செயல்பாடு மற்றும் இவை அளிக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.
‘ஆன்லைன்’ மூலம்:
வங்கிச் சேவைகள் பெருமளவில், ‘டிஜிட்டல்’ மயமாகி இருக்கின்றன. இந்நிலையில், ஆன்லைனில் மட்டும் செயல்படும் வங்கிகள், நியோ வங்கிகள் என அழைக்கப்படுகின்றன. இவை, கிளைகள் இல்லாமல், செயலி மூலம் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. இந்த வங்கிகள் வர்த்தக டெபாசிட் பெற, இந்தியாவில் அனுமதி இல்லை.
நிதி நிர்வாகம்:
நியோ வங்கி செயலிகள் மூலம், பங்கு வர்த்தகம் உள்ளிட்ட பலவித சேவைகளை அணுகலாம். மேலும், இந்த செயலிகள் பயனாளிகளின் அனைத்து வங்கி கணக்குகள், ‘கிரெடிட் கார்டு’ விபரங்களை ஒரே இடத்தில் அணுக வழி செய்கின்றன. இதனால், பரிவர்த்தனைகள் மேம்படுவதோடு, நிதி நிர்வாகம் எளிதாகிறது.
அறிவிப்புகள்:
புது யுக செயலிகள், நிதி விஷயங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அளிப்பதோடு, பணம் செலுத்துவது உள்ளிட்ட விஷயங்களுக்கான நினைவூட்டலையும் அளிக்கின்றன. நிதி செயல்பாடுகள் தொடர்பான விபரங்களை உரிய நேரத்தில் தெரிந்து கொண்டு, நடவடிக்கை எடுக்கலாம்.
அவசர நிதி:
வாடிக்கையாளர்களின் நிதி பழக்கங்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப தகவல் அளிக்கும் வகையில் இந்த செயலிகள் அமைந்துள்ளன. எனவே, செலவு பழக்கம் தொடர்பான தகவல்களை பெறலாம். இது, பட்ஜெட்டை கடைப்பிடிக்க உதவும். மற்ற பரிவர்த்தனைகளுக்கும் இந்த செயலிகளை பயன்படுத்தலாம்.
அவசர கால நிதி:
இந்த செயலிகளில் சில, வாடிக்கையாளர்களின் நிதி இலக்குகளுக்கு ஏற்ப சேவை அளிக்கும் அம்சங்களை கொண்டுள்ளன. இந்த அம்சத்தை பயன்படுத்தி, அவசர கால நிதியை உருவாக்கி கொள்ளலாம். வேறு இலக்குகளுக்கு சேமிக்கவும் இந்த வசதி கைகொடுக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|