வீட்டுக்கடன் பெறுவதற்கு முன்   தீர்மானிக்க வேண்டிய அம்சங்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கு முன் தீர்மானிக்க வேண்டிய அம்சங்கள் ...  காப்பீடு வசதியை நாடும் பெண்கள் காப்பீடு வசதியை நாடும் பெண்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
புதுயுக வங்கி செயலிகள் மூலம் பலன் பெறுவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2021
20:52

நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, வங்கி மற்றும் நிதிச் சேவைகளை பெறுவதில் வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, நிதி நுட்ப நிறுவனங்கள் முற்றிலும் புதுமையான முறையில் நிதிச் சேவைகளை பெற வழி செய்கின்றன.


இவற்றில், நியோ வங்கிகள் என குறிப்பிடப்படும் புதுயுக வங்கி செயலிகள், அண்மை காலமாக கவனத்தை ஈர்த்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த வகை செயலிகளின் செயல்பாடு மற்றும் இவை அளிக்கும் பலன்கள் பற்றி பார்க்கலாம்.

‘ஆன்லைன்’ மூலம்:


வங்கிச் சேவைகள் பெருமளவில், ‘டிஜிட்டல்’ மயமாகி இருக்கின்றன. இந்நிலையில், ஆன்லைனில் மட்டும் செயல்படும் வங்கிகள், நியோ வங்கிகள் என அழைக்கப்படுகின்றன. இவை, கிளைகள் இல்லாமல், செயலி மூலம் பல்வேறு சேவைகளை வழங்குகின்றன. இந்த வங்கிகள் வர்த்தக டெபாசிட் பெற, இந்தியாவில் அனுமதி இல்லை.


நிதி நிர்வாகம்:


நியோ வங்கி செயலிகள் மூலம், பங்கு வர்த்தகம் உள்ளிட்ட பலவித சேவைகளை அணுகலாம். மேலும், இந்த செயலிகள் பயனாளிகளின் அனைத்து வங்கி கணக்குகள், ‘கிரெடிட் கார்டு’ விபரங்களை ஒரே இடத்தில் அணுக வழி செய்கின்றன. இதனால், பரிவர்த்தனைகள் மேம்படுவதோடு, நிதி நிர்வாகம் எளிதாகிறது.


அறிவிப்புகள்:


புது யுக செயலிகள், நிதி விஷயங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து அளிப்பதோடு, பணம் செலுத்துவது உள்ளிட்ட விஷயங்களுக்கான நினைவூட்டலையும் அளிக்கின்றன. நிதி செயல்பாடுகள் தொடர்பான விபரங்களை உரிய நேரத்தில் தெரிந்து கொண்டு, நடவடிக்கை எடுக்கலாம்.


அவசர நிதி:


வாடிக்கையாளர்களின் நிதி பழக்கங்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப தகவல் அளிக்கும் வகையில் இந்த செயலிகள் அமைந்துள்ளன. எனவே, செலவு பழக்கம் தொடர்பான தகவல்களை பெறலாம். இது, பட்ஜெட்டை கடைப்பிடிக்க உதவும். மற்ற பரிவர்த்தனைகளுக்கும் இந்த செயலிகளை பயன்படுத்தலாம்.


அவசர கால நிதி:



இந்த செயலிகளில் சில, வாடிக்கையாளர்களின் நிதி இலக்குகளுக்கு ஏற்ப சேவை அளிக்கும் அம்சங்களை கொண்டுள்ளன. இந்த அம்சத்தை பயன்படுத்தி, அவசர கால நிதியை உருவாக்கி கொள்ளலாம். வேறு இலக்குகளுக்கு சேமிக்கவும் இந்த வசதி கைகொடுக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)