பதிவு செய்த நாள்
09 மார்2021
03:12
புதுடில்லி : பயணியர் வாகன பிரிவை தனி வணிகமாக ஏற்படுத்தி கொள்வதற்கு, பங்குதாரர்கள் அனுமதி வழங்கி விட்டதாக, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
பயணியர் வாகன பிரிவை மேம்படுத்த, நீண்டகால பார்வையில், அதை தனி வணிகமாக மாற்றும் முடிவுக்கு வந்தது, டாடா மோட்டார்ஸ்.இதையடுத்து, கடந்த, 5ம் தேதி நடைபெற்ற கருத்துக் கேட்பில், பெரும்பாலான பங்குதாரர்கள், பயணியர் வாகன பிரிவு வணிகத்தை, ‘டி.எம்.எல்., பிசினஸ் அனலிடிக்ஸ் சர்வீசஸ்’ எனும் நிறுவனமாக மாற்ற அனுமதி வழங்கி உள்ளனர்.கிட்டத்தட்ட, 99.96 சதவீத பங்குதாரர்கள், பயணியர் வாகனத்தை தனி வணிகமாக மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறார்கள்.
0.04 சதவீதத்தினர் மட்டுமே, எதிராக வாக்களித்துள்ளனர்.டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணியர் வாகன வணிகத்தின் மதிப்பு, 9,417 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருப்பதாகவும், டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. பயணியர் வாகன பிரிவை, தனி வணிகமாக அமைக்கும் முயற்சி, நடப்பு ஆண்டு, மே –- ஜூன் மாதத்திற்குள்ளாக முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|