பதிவு செய்த நாள்
10 மார்2021
21:16
மும்பை:‘ஆர்கிட் பார்மா’ நிறுவனத்தின் பங்குகள் விலை, கடந்த நான்கு மாதங்களில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இன்னும் சொல்வதென்றால், ‘பிட்காயின்’ வளர்ச்சியை விட, பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில், ஆர்கிட் பார்மா நிறுவனத்தின் பங்குகள் விலை, கிட்டத்தட்ட, 7,000 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில், பிட்காயின், 200 சதவீத உயர்வையே கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு, நவம்பர், 3ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவன பங்கின் விலை, 18 ரூபாயாக இருந்தது. நேற்று, மும்பை பங்குச் சந்தையின் இதன் விலை, 1,307.55 ஆக அதிகரித்துள்ளது.
கிட்டத்தட்ட, நான்கு மாதங்களில், இந்த உயரத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்கிட் பார்மா நிறுவனத்தை, ‘தானுகா லேபாரட்டரீஸ்’ கையகப் படுத்திய பின், இந்நிறுவனத்தின் பங்குகள், 18 ரூபாய் விலையுடன், மறுபட்டியலிடப்பட்டது.அது, இப்போது விஸ்வரூப வளர்ச்சியை காட்டி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|