பதிவு செய்த நாள்
11 மார்2021
23:18
புதுடில்லி:சர்வதேச தீர்ப்பாயத்தில், ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனத்துக்கு சாதகமாக வழங்கப் பட்ட தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வதற்கான பணிகளை, இந்தியா துவக்கி உள்ளது.
பிரிட்டனை சேர்ந்த, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், வரி விவகாரம் சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக, சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தது. அங்கு, கெய்ர்ன் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.இந்நிலையில், 2020ம் ஆண்டு இறுதி வரைக்குமான கணக்கீட்டின் படி, வட்டித் தொகையையும் சேர்த்து மொத்தம், 12 ஆயிரத்து, 410 கோடி ரூபாயை, இந்தியஅரசு தர வேண்டும் என, கெய்ர்ன் தெரிவித்து உள்ளது.
அத்துடன் இந்தியா, தொகையை திருப்பி வழங்காத பட்சத்தில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அரசாங்கத்துக்கான சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என்றும் அறிவித்து இருந்தது.இச்சூழலில், இந்திய அரசு, மேல்முறையீடு செய்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், மேல்முறையீடு குறித்து ஏற்கனவே சூசகமாக தெரிவித்து இருந்தார்.இப்போது, அதற்கான பணிகள் துவங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|