பதிவு செய்த நாள்
20 மார்2021
21:51
புதுடில்லி:அண்மைக் காலமாக, ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீடுகளில் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதையடுத்து, தொடர்ச்சியாக பல நிறுவனங்கள், தங்கள் பங்குகளை சந்தையில் பட்டியலிடும் முயற்சியில் இறங்கி வருகின்றன.
இந்த வகையில், ‘பார்பிக்யு நேஷன்’ உணவகமும், புதிய பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.இந்நிறுவனம், 180 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 54.57 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டப்படும் நிதியை, விரிவாக்கத்துக்கு தேவைப் படும் மூலதன செலவுகளுக்கும், சில கடன்களை அடைக்கவும் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. ‘பார்பிக்யு நேஷன்’ ஏற்கனவே புதிய பங்கு வெளியீட்டுக்காக, ‘செபி’க்கு விண்ணப்பித்து, கடந்த ஆண்டு ஜூலையில் அனுமதியும் பெற்றுள்ளது.
இதற்கு முன், கடந்த, 2017ம் ஆண்டில் ஒரு முறை பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்து, 2018ல் அனுமதி பெற்றிருந்தது. ஆனால், சந்தை நிலவரம் சாதகமாக இல்லாத காரணத்தால், பங்கு வெளியீட்டுக்கு வரும் திட்டத்தை தள்ளிவைத்துவிட்டது. இந்நிலையில், இப்போது மீண்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்நிறுவனத்துக்கு, இந்தியாவில், 138 உணவகங்கள் உள்ளன. மேலும், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், மலேஷியா ஆகிய நாடுகளில், 7 உணவகங்கள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|