பதிவு செய்த நாள்
23 மார்2021
20:52
புதுடில்லி: பாலிசிதாரர்களின், ‘கிௌய்ம்’ நிராகரிக்கப்படும்பட்சத்தில், காப்பீட்டு நிறுவனங்கள், அதற்கான காரணத்தை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையமான, ‘ஐ.ஆர்.டி.ஏ.ஐ.,’ அறிவித்துள்ளது.
இதையடுத்து, இனி ஹெல்த் இன்சூரன்ஸ் கிௌய்ம்களை பொறுத்தவரை, அது நிராகரிக்கப்படுவதற்கான காரணத்தை, காப்பீட்டு நிறுவனங்கள் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., மேலும் தெரிவித்துள்ளதாவது: ஹெல்த் இன்சூரன்ஸ் கிௌய்ம்களில், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். கிௌய்ம்களின் ஒவ்வொரு கட்டங்களிலும், பாலிசிதாரர்களுக்கு அது குறித்த தெளிவான மற்றும் வெளிப்படையான தகவல் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும். பாலிசிதாரர் விண்ணப்பித்ததிலிருந்து இறுதிவரையில், என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க வேண்டும்.
காப்பீட்டு நிறுவனங்கள் இதற்காக செயலி, இணையதளம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, பாலிசிதாரர்கள் தங்கள் கிெளய்ம் நிலை குறித்து அறிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|