புதிதாக 1.38 லட்சம் நிறுவனங்கள் கொரோனா காலத்தில் துவக்கம் புதிதாக 1.38 லட்சம் நிறுவனங்கள் கொரோனா காலத்தில் துவக்கம் ...  வேலையில்லா திண்டாட்டம் குறைகிறது: ஓராண்டுக்கு முந்தைய நிலை திரும்புகிறது வேலையில்லா திண்டாட்டம் குறைகிறது: ஓராண்டுக்கு முந்தைய நிலை ... ...
‘பிட்காயினில் முதலீடு செய்ய மக்களை அனுமதிக்க வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2021
20:57

புதுடில்லி: ‘பிட்காய்ன்’ உள்ளிட்ட, மெய்நிகர் நாணயங்களில், மக்கள் முதலீடு செய்வதை அனுமதிக்க வேண்டும் என, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி கூறியுள்ளார்.

பிட்காய்ன் உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ நாணய பரிவர்த்தனைக்கு தடை விதிப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இந் நிலையில் ஆதார் கார்டு, யு.பி.ஐ., பேமென்ட் உள்கட்டமைப்பு, பாஸ்டேக் ஆகிய பல டிஜிட்டல் முன்னேற்றங்களில் முக்கிய பங்கு வகித்த நந்தன் நிலேகனி, ஆன்லைன் நாணயங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:நாம் ஆன்லைன் நாணயங்களை முதலீட்டுக்கான ஒரு வழியாக கருதி, அதில் மக்களை முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும்.ஒரு நாளைக்கு, 100 கோடி பரிவர்த்தனைகளை இலக்காக கொண்டு செயல்படும், யு.பி.ஐ., பேமென்ட் போல, ஆன்லைன் நாணயங்கள் வேகமாக செயல்படாது. ஆனால், இவற்றிடம் மகத்தான மூலதனம் இருக்கிறது.

ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் நாணயம் வெளியிடுவது குறித்து, நாட்டின் கட்டுபாட்டு அமைப்புகள் ஆலோசித்து வருகின்றன. நமக்கு அப்படி ஒரு நிலையான நாணயம் தேவையா என்பது தெரியவில்லை. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பிட்காயினை பயன்படுத்தி, எப்படி தங்களது மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என, பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதலீடு

இந்தியாவில் கிட்டத்தட்ட, 75 லட்சம் பேர், ஆன்லைன் நாணயங்களில் முதலீடு செய்துள்ளனர். இவற்றில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகை, 10_15 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என கருதப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)