பதிவு செய்த நாள்
24 மார்2021
19:16
புதுடில்லி:இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அன்னிய மின்னணு நிறுவனங்களுக்கான, ‘டிஜிட்டல்’ வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2020 ஏப்ரல் முதல், இந்தியாவில் பதிவு அலுவலகம் இல்லாமல், ‘ஆன்லைன்’ மூலம் சரக்கு மற்றும் சேவைகளை வழங்கும் அன்னிய நிறுவனங்களுக்கு, 2 சதவீத டிஜிட்டல் வரி விதிப்பு அமலுக்கு வந்தது. ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் ஈட்டும் நிறுவனங்கள், இந்த வரி விதிப்பில் இடம் பெற்றுள்ளன.சந்தையில், வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியை உள்நாட்டு நிறுவனங்கள் சமாளிப்பதற்காக, இந்த வரி விதிப்பு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் கிளை நிறுவனத்தை துவக்கி, அதன் மூலம், ஆன்லைன் விற்பனையில் ஈடுபடும், வெளிநாட்டு மின்னணு நிறுவனங்களுக்கு, டிஜிட்டல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்திய நிறுவனங்கள் நிரந்தர அலுவலகத்துடன், வருமான வரி செலுத்தும் பட்சத்தில், இந்த வரி செலுத்த தேவையில்லை என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏப்., 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|