பதிவு செய்த நாள்
25 மார்2021
20:45
புதுடில்லி:‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் பின்னணியில் இயங்கும், ‘தி நியூ அம்பர்லா என்டைட்டி கன்சோர்ட்டியம்’ நிறுவனம், சில்லரை பணப்பரிவர்த்தனைக்காக, மொபைல் போன் அடிப்படையிலான, ‘பாயின்ட் ஆப் சேல்’ சேவையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பணம் செலுத்துவதற்காக, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொடுக்கும் போது, ‘பாயின்ட் ஆப் சேல்’ மெஷினை பயன்படுத்தி பணத்தை எடுத்துக் கொள்வார்கள். இதற்குப் பதிலாக, மொபைல் போனை பயன்படுத்தி, பணபரிவர்த்தனையை மேற்கொள்ளும் முறையை உருவாக்கி வருகிறது இந்த, கன்சோர்ட்டியம்.
ஒவ்வொருத்தருக்கும் என தனியாக ஒரு, ‘யுனிவர்செல் பேமென்ட் ஐ.டி.,’ உருவாக்கப்படும். மேலும், இந்த ‘யுனிவர்செல் பாயின்ட் ஆப் மிஷின் மூலம் எந்த ஒரு போனிலிருந்தும் பணத்தை பெற்றுக்கொண்டுவிடலாம்.இதன் மூலமாக சிறிய அளவிலான பணப்பரிவர்த்தனைக்கு ரொக்கத்தை பயன்படுத்துவது கணிசமாக குறையும். மேலும் காகித ரசீது பெற தேவையிருக்காது. மொபைல்போனில் ரசீது வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|